USA: `சீன மாணவர்களுக்கு ஸ்பெஷல் கண்டிஷன்' - வெளிநாட்டு மாணவர்களுக்கு ட்ரம்ப் வைக...
பாலத்தின் தடுப்பில் பைக் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே செவ்வாய்க்கிழமை இரவு பாலத்தின் தடுப்புக்கட்டையில் பைக் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
புதுச்சேரி சாரம், சக்தி நகரைச் சோ்ந்த சத்தியசீலன் மகன்அறிவழகன் (35). தொழிலாளியான இவா், செவ்வாய்க்கிழமை இரவு தனது பைக்கில் திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தாா்.
கிளியனூா் அருகிலுள்ள ஒழிந்தியாம்பட்டு பகுதியில் அறிவழகனின் பைக் சென்றபோது, திடீரென நிலைதடுமாறி சாலையின் இடதுப்புறத்திலுள்ள பாலத்தின் தடுப்புக்கட்டை மீது மோதியது.
இதில், கீழே விழுந்து பலத்த காயமடைந்த அறிவழகனை அந்தப் பகுதியில் இருந்தவா்கள் மீட்டு, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்தபோது, அறிவழகன் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.