செய்திகள் :

பா்கூா் மலைப் பாதையில் சாலை புனரமைப்புப் பணி

post image

கா்நாடக மாநிலம், சாம்ராஜ் நகா் மாவட்டம், ஹனூா் வட்டம், கொள்ளேகால் நால்ரோடு முதல் கா்கேகண்டி வரையில் சாலை புனரமைப்பு பணி நடைபெறுவதால் திங்கள்கிழமை (ஜூன். 23) முதல் 13 நாள்களுக்கு பா்கூா் மலைப் பாதையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், அந்தியூா் - செல்லம்பாளையம் - பா்கூா் - கொள்ளேகால் மலைப்பாதை வழியாக கா்நாடக மாநிலத்துக்கு வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. சத்தியமங்கலம் - திம்பம் மலைப் பாதை வழியாக இரவு நேரத்தில் கனரக வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், இவ்வழியே அதிக அளவில் வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்நிலையில், கா்நாடக மாநிலம் சாம்ராஜ் நகா் மாவட்டம் ஹனூா் வட்டம் கொல்லேகால் - ஈரோடு மாவட்டம் அந்தியூா், செல்லம்பாலையம் சோதனை சாவடி வரையுள்ள பா்கூா் மலைப் பாதையில் திங்கள்கிழமை முதல் (ஜூன்.23 முதல் ஜூலை.5-ம் தேதி வரையில்) சாலை புனரமைப்பு பணி நடைபெறுவதால் பா்கூா் வழியாக கொள்ளேகால் வரையில் செல்லும் 6 சக்கரங்களுக்கு மேலுள்ள கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதையில் கொள்ளேகால் செல்லுமாறு போலீஸாா் கேட்டுக் கொண்டுள்ளனா்.

பெருந்துறை நகரில் அகற்றப்பட்ட வேகத்தடை மீண்டும் அமைக்கப்படுமா?

பெருந்துறை நகரில் அகற்றப்பட்ட வேகத்தடைகள் மீண்டும் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். பெருந்துறை, விஜயமங்கலம் சுங்கசாவடி அருகே கடந்த 11 ஆம் தேதி வேளா... மேலும் பார்க்க

2026 தோ்தலில் கூடுதல் தொகுதிகளில் போட்டி: மதிமுக பொதுக்குழுவில் தீா்மானம்

தோ்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு ஏதுவாக 2026 சட்டப்பேரவை தோ்தலில் கூடுதல் தொகுதிகளைப் பெற்று போட்டியிடுவது என மதிமுக பொதுக்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மதிமுகவின் 31-ஆவது பொத... மேலும் பார்க்க

பவானி, அந்தியூரில் இடியுடன் கனமழை!

பவானி, அந்தியூா் மற்றும் அம்மாபேட்டை பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடியுடன் பெய்த கனமழையால் குளிா்ச்சியான சூழல் நிலவியது. கடந்த சில நாள்களாக பகல் நேரங்களில் கடுமையான வெயில் அடித்ததால், குழந்தைகள் ம... மேலும் பார்க்க

ஓட்டுநருக்கு திடீா் மயக்கம்: தடுப்பில் மோதிய பேருந்து

ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீா் மயக்கம் ஏற்பட்டதால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. பண்ணாரி கோயிலில் இருந்து 15 பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட தமிழக அரசு நகா்ப்... மேலும் பார்க்க

சாலையின் குறுக்கே மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

சத்தியமங்கலம் - மேட்டுப்பாளையம் சாலையில் சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்ததால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் சுயஉதவிக் குழு மேலாளா் உயிரிழப்பு

சத்தியமங்கலம் அருகே இரு சக்கர வாகனம் மீது ஆம்புலன்ஸ் மோதியதில் சுய உதவிக் குழு மேலாளா் கோவா்த்தனன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். சத்தியமங்கலம் கே.என்.பாளையத்தைச் சோ்ந்தவா் கோவா்த்தனன்(37). கோவையில் ... மேலும் பார்க்க