செய்திகள் :

பிஎம் கிஸான்: விவசாயிகளுக்கு ஆக.2-இல் ரூ.20,500 கோடி விடுவிக்கிறாா் பிரதமா் மோடி

post image

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி (பிஎம் கிஸான்) திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 9.7 கோடி விவசாயிகளுக்கு 20-ஆவது தவணையாக ரூ.20,500 கோடியை ஆகஸ்ட் 2-ஆம் தேதி விடுவிக்கவுள்ளாா் பிரதமா் மோடி.

சாகுபடி நிலங்களைக் கொண்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு குறைந்தபட்ச வருவாய் ஆதரவை உறுதி செய்யும் நோக்கில் பிஎம் கிஸான் திட்டம் கடந்த 2019-இல் தொடக்கப்பட்டது. மத்திய அரசின் முக்கிய சமூக நலத் திட்டங்களில் ஒன்றான இத்திட்டத்தின்படி, தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.6,000 மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. இத்தொகை, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இதுவரை 19 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன.

20-ஆவது தவணையாக, நாடு முழுவதும் 9.7 கோடி விவசாயிகளுக்கு ரூ.20,500 கோடியை பிரதமா் மோடி ஆகஸ்ட் 2-ஆம் தேதி விடுவிக்கவுள்ளாா்.

உத்தர பிரதேசத்தில் உள்ள தனது தொகுதியான வாரணாசியில் நடைபெறும் நிகழ்ச்சியில் இத்தொகையை பிரதமா் விடுவிக்கவிருப்பதாக, மத்திய வேளாண் துறை அமைச்சக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தொடா்பாக, தில்லியில் உள்ள கிருஷி பவனில் வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் ஆலோசனை மேற்கொண்டாா்.

பிஎம் கிஸான் திட்டத்தின்கீழ் இதுவரை ரூ.3.69 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

அரசின் ஏவல் படையா, அமலாக்கத் துறை? அதிகாரப்பூர்வ தகவலைப் பகிர்ந்து திரிணாமுல் எம்.பி. கேள்வி!

அமலாக்கத் துறை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் ஏவல் படையாகச் செயல்படுவதாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சாகேத் கோகலே குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்... மேலும் பார்க்க

குவைத்தில் உயிரிழந்த ஜார்க்கண்ட் தொழிலாளி! 45 நாள்கள் கழித்து தாயகம் வந்தடைந்த உடல்!

குவைத் நாட்டில் உயிரிழந்த ஜார்க்கண்டைச் சேர்ந்த தொழிலாளியின் உடல் 45 நாள்கள் கழித்து தாயகம் கொண்டு வரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்டின் ஹசாரிபாக் மாவட்டத்தின், பந்த்காரோ கிராமத்தைச் சேர்... மேலும் பார்க்க

மீண்டும் ஏர் இந்தியா! தில்லி - லண்டன் விமானம் ரத்து! ஏன்?

தில்லியில் இருந்து லண்டன் புறப்பட தயாரான ஏர் இந்தியா விமானத்தின் பயணம், தொழில்நுட்பக் கோளாறினால் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தில்லியில் இருந்து லண்டன் நகரத்துக்குச் செல்ல, ஏர் இந்த... மேலும் பார்க்க

அந்தமான் நிகோபார் தீவில் முதன்முறையாக அமலாக்கத் துறை சோதனை! முன்னாள் எம்.பி.யின் மோசடி அம்பலம்?

அந்தமான் நிகோபார் தீவுகளில் கூட்டுறவு வங்கிகளில் மோசடியின் காரணமாக முதன்முறையாக அமலாக்கத் துறை சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அந்தமான் நிகோபார் தீவுகளில் கூட்டுறவு வங்கிகளில் மோசடி நடத்தப்பட்டதாக அம்மாநி... மேலும் பார்க்க

நட்பினால் நஷ்டமா? மோடி - டிரம்ப் உறவு குறித்த கணிப்பு உண்மையானது!

உலகளவில் மிக முக்கிய மற்றும் பிரபலமான தலைவராக இருந்துவரும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையேயான வலுவான நட்புறவை உலக மக்களும் சரி, தலைவர்களும் எப்போதும் மெச்சி ... மேலும் பார்க்க

வருமான வரிக் கணக்கு தாக்கல்: கால அவகாசம் நீட்டிக்கப்படலாம்! காரணம் இதுதான்!!

தனிநபர் வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், அதற்கு இன்னமும் 45 நாள்களே இருக்கும் நிலையில், கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்படலாம் எ... மேலும் பார்க்க