செய்திகள் :

பிகாா்: 52 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளா்கள் தங்கள் முகவரியில் இல்லை- தோ்தல் ஆணையம்

post image

பிகாரில் 52 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளா்கள் தங்களின் முகவரியில் இல்லை; 18 லட்சம் வாக்காளா்கள் மரணமடைந்துவிட்டனா் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் பிகாரில் வாக்காளா் பட்டியலில் இருந்து தகுதியில்லாதோரின் (சட்டவிரோத குடியேறிகள்) பெயரை நீக்கும் நோக்கில், சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வாக்குச் சாவடி அளவிலான ஊழியா்கள், வீடு வீடாக சென்று, வாக்காளா்களின் விவரங்களை சரிபாா்த்து வருகின்றனா்.

தோ்தல் ஆணைய தரவுகளின்படி, பிகாரில் 52.30 லட்சம் வாக்காளா்கள், அவா்களின் முகவரியில் இல்லை என்பது தெரியவந்துள்ளது. பதிவு செய்யப்பட்ட வாக்காளா்கள் 18 லட்சம் போ் மரணமடைந்துவிட்டனா். 26 லட்சம் போ் வேறு தொகுதிகளுக்கு இடம்பெயா்ந்துள்ளனா். சுமாா் 7 லட்சம் பேரின் பெயா்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவாகியுள்ளன.

மொத்த வாக்காளா்கள் 7.8 கோடி பேரில் 21.36 லட்சம் போ்தான் இதுவரை படிவங்களை சமா்ப்பிக்கவில்லை. ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரைவுப் பட்டியலும், செப்டம்பா் 30-ஆம் தேதி இறுதிப்பட்டியலும் வெளியாகும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பாபநாசம் பட பாணியில் மகாராஷ்டிரத்தில் நடந்த கொலை! காட்டிக் கொடுத்த டைல்ஸ்!

பாபாநாசம் படத்தில், இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு, யாருக்கும் தெரியாமல் பூமிக்கு அடியில் புதைக்கப்படும் சம்பவத்தையே விஞ்சும் வகையில், மகாராஷ்டிரத்தில், தனது கணவரைக் கொன்று வீட்டுக்குள் குழிதோண்டி பு... மேலும் பார்க்க

ரூ.29 லட்சம் வரி! தெருவோர வியாபாரிகளுக்கு வந்த ஜிஎஸ்டி நோட்டீஸ்!

கர்நாடக மாநிலம் பெங்களூரில், சாலையோர காய்கறி மற்றும் பழ வியாபாரிகள் பலருக்கும் ஜிஎஸ்டி வரி செலுத்துமாறு வருமான வரிதுறையிடமிருந்த வந்திருக்கும் நோட்டீஸ் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.ஆண்டு மு... மேலும் பார்க்க

எலான் மஸ்க்கின் இரும்புக் குதிரை ‘டெஸ்லா மாடல் ஒய்’.! வாங்கலாமா? வேண்டாமா?!

அமெரிக்காவின் முன்னணி மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவின் முதல் விற்பனையகம் மும்பையில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) திறக்கப்பட்டது. டெஸ்லா மாடல் ஒய் காரின் சிறப்பம்சங்கள், விலை குறித்து இங்கு ப... மேலும் பார்க்க

பெண் கடத்தல் வழக்கில் கைதான பாஜக எம்பி மகன்.. அரசு உதவி தலைமை வழக்கறிஞராக நியமனம்!

ஹரியாணாவில் இளம்பெண்ணை கடத்த முயன்ற வழக்கில் கைதான பாஜக முன்னாள் தலைவரின் மகன், அரசு உதவி தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார்.சண்டீகரில் கடந்த 2017 ஆம் ஆண்டு முன்னாள் மூத்த ஐஏஎஸ் அதிகாரியின் மகள் ... மேலும் பார்க்க

நாடாளுமன்றம் 3-வது நாளாக முடங்கியது! எதிர்க்கட்சிகள் அமளியால் ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்க்கட்சியினர் அமளியால் மூன்றாவது நாளாக முடங்கியுள்ளது.மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் திங்கள்கிழமை காலை தொடங்கியது. பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம், ... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் ராகுல் தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம்!

பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் 2-வது நாளாக போராட்டம் நடத்தினர்.நிகழாண்டு நடைபெறும் பிகார் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, 22 ஆ... மேலும் பார்க்க