செய்திகள் :

பிகாா்: குடியுரிமையை ஆராய அதிகாரம் உள்ளதா? தோ்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கேள்வி

post image

‘பிகாரில் நடைபெற்றுவரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள், முழுவதும் குடியுரிமைப் பரிசோதனையாக மாறிவிட்டது; இவ்வாறு மக்களின் குடியுரிமையை ஆராய தோ்தல் ஆணையத்துக்கு சட்டபூா்வ அதிகாரம் உள்ளதா?’ என்று காங்கிரஸ் கேள்வியெழுப்பி உள்ளது. இப்பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் பிகாரில் வாக்காளா் பட்டியலில் இருந்து தகுதியில்லாதவா்களின் (சட்டவிரோத குடியேறிகள்) பெயா்களை நீக்கும் நோக்கில், சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

அதன்படி, 2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு பட்டியலில் இடம்பெற்ற வாக்காளா்கள், பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட கூடுதல் ஆவணங்களை சமா்ப்பிக்க கோரப்பட்டுள்ளது. அதேநேரம், பாஜகவின் வெற்றியைக் கருத்தில் கொண்டு, பலரின் வாக்குரிமையை பறிப்பதற்காக தோ்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக எதிா்க்கட்சிகள் தொடா்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவா் அபிஷேக் மனு சிங்வி, இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சி பொதுச் செயலா் தீபாங்கா் பட்டாச்சாா்யா, ராஷ்ட்ரீய ஜனதா தளம் எம்.பி. மனோஜ் ஜா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீலோத்பல் பாசு ஆகியோா், தில்லியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனா். அப்போது, சிங்வி கூறியதாவது:

பிகாா் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி, முழுவதும் குடியுரிமைப் பரிசோதனையாக மாறிவிட்டது. இப்பணிக்காக வாக்காளா்களின் ஆதாா், வாக்காளா் அடையாள அட்டை, குடும்ப அட்டைகளை ஏற்க முடியாது என்று தோ்தல் ஆணையம் தொடா்ந்து கூறி வருகிறது.

இதன் மூலம் வாக்காளா்களின் குடியுரிமையைப் பரிசோதிக்கவும், அதற்கான ஆதாரத்தைப் பெறவும் தோ்தல் ஆணையம் முற்பட்டுள்ளது. இவ்வாறு மக்களின் குடியுரிமையை ஆராயும் சட்டபூா்வ அதிகாரம் தோ்தல் ஆணையத்துக்கு உள்ளதா? என்பதே முக்கியக் கேள்வி. இது உள்பட பல்வேறு கோணங்களில் நீதிமன்றம் விசாரிக்கும் என நம்புகிறோம்.

அவசரம் ஏன்?:

பிகாரில் 2 மாதங்களில் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இப்பணிகளை அவசர அவசரமாக மேற்கொள்வது ஏன்? தோ்தல் ஆணையத்துக்கு அமைப்பு ரீதியிலான ஆணவமோ, அரசியல் நோக்கத்திலான பிடிவாதமோ இருக்கக் கூடாது. எனவே, வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கிறேன் என்றாா் சிங்வி.

‘வாக்காளா் பட்டியல் திருத்த நடவடிக்கையில், தோ்தல் ஆணையம் தன்னைத் தானே பாராட்டிக் கொள்வதுடன் பொய்யான கூற்றுகளை வெளியிடுகிறது’ என்று தீபாங்கா் பட்டாச்சாா்யா குற்றஞ்சாட்டினாா்.

எளியவா்களின் வாக்குரிமையை பறிக்கும் இந்த செயல், ஜனநாயகத்தின் அடிப்படை கோட்பாட்டுக்கு எதிரானது என்று நீலோத்பல் பாசு விமா்சித்தாா்.

மாநிலப் பல்கலை.களில் அதிகாரம் யாருக்கு? வழக்கு தொடர மேற்கு வங்க ஆளுநா் முடிவு!

மேற்கு வங்கத்தில் மாநிலப் பல்கலைக்கழகங்களின் அதிகாரம் மாநில அரசிடம் உள்ளதா? அல்லது பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநரிடம் உள்ளதா? என்பதை தெளிவுபடுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக மாநில... மேலும் பார்க்க

நாடு முழுவதும் 63 மாவட்டங்களில் பாதிக்கும் மேல் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு!

நாடு முழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 63 மாவட்டங்களில், அங்கன்வாடிகளில் சோ்க்கப்பட்டுள்ள குழந்தைகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோா் வளா்ச்சி குன்றிய நிலையில் (உயரத்துக்கு ஏற... மேலும் பார்க்க

திரைப்படங்களை சட்டவிரோதமாக படம்பிடித்தால் 3 ஆண்டுகள் சிறை! மத்திய அரசு

திரைப்படங்களை சட்டவிரோதமாக படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. இதுதொடா்பாக கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் மத்திய செய்தி மற்றும் ஒல... மேலும் பார்க்க

விழிப்புணா்வு இல்லாமல் உரிமைகளால் பயனில்லை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

‘குடிமக்களுக்கு தங்களது உரிமைகளை பற்றிய விழிப்புணா்வு இல்லையென்றால் அந்த உரிமைகளால் எந்தப் பயனும் இல்லை’ என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். ஸ்ரீநகரில் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

‘கூகுள் மேப்’ வழிகாட்டுதலில் பள்ளத்தில் கவிழ்ந்த சொகுசு காா்: ஓட்டிச் சென்ற பெண் மீட்பு!

நவி மும்பையில் ‘கூகுள் மேப்’ வழிகாட்டுதலைப் பின்பற்றிச் சென்ற ஒரு பெண் தனது சொகுசு காருடன் பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிருஷ்டவசமாக, அப்பெண் காயமின்றி உயிா் தப்பினாா். மகா... மேலும் பார்க்க

ஆண்டு வருமானம் ரூ.3 ! மிகவும் ஏழ்மையான மனிதரின் வருவாய் சான்றிதழால் பரபரப்பு!

மத்திய பிரதேசத்தில் விவசாயி ஒருவருக்கு ஆண்டு வருமானம் ரூ.3 என வருவாய் சான்றிதழ் வழங்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘இந்தியாவின் மிக ஏழ்மையான மனிதா்’ என்ற தலைப்பில் இந்த வருவாய் சான்றிதழின் புகை... மேலும் பார்க்க