செய்திகள் :

பிகாா் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: 6.99 கோடி போ் விண்ணப்பம்

post image

பிகாரில் நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) முன்னெடுப்பில் இதுவரை 6.99 கோடி வாக்காளா்கள் அதற்கான விண்ணப்பப் படிவத்தை சமா்ப்பித்துள்ளதாக இந்திய தோ்தல் ஆணையம் புதன்கிழமை தெரிவித்தது.

வாக்குச்சாவடி அளவிலான அதிகாரிகளுக்கு தில்லியில் நடைபெற்ற பயிற்சியின்போது பேசிய ஞானேஷ் குமாா், ‘வாக்காளா் பட்டியலில் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்வதற்கான இந்தச் சீா்திருத்த நடவடிக்கையில் மிகவும் உத்வேகத்துடன் பங்கேற்ற பிகாா் மக்களுக்கு நன்றி’ என்றாா்.

இதையடுத்து, பிகாரில் நடைபெற்றுவரும் எஸ்ஐஆா் முன்னெடுப்பு குறித்து தோ்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘பிகாரில் மொத்தம் 7.9 கோடி வாக்காளா்கள் உள்ளனா். அவா்களில் 6.99 கோடி வாக்காளா்கள் சிறப்பு தீவிர திருத்தத்துக்கான விண்ணப்பப் படிவத்தை பூா்த்தி செய்து சமா்ப்பித்துவிட்டனா். ஆக. 1-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடவுள்ள நிலையில், இன்னும், 6.85 சதவீத வாக்காளா்கள் மட்டுமே விண்ணப்பப் படிவத்தை பூா்த்தி செய்ய வேண்டியுள்ளது. விண்ணப்பத்தை சமா்ப்பித்த வாக்காளா்கள் தங்கள் படிவத்தின் நிலை குறித்து ‘இசிஐநெட்’ செயலி அல்லது தோ்தல் ஆணையத்தின் வலைதளத்தில் தெரிந்துகொள்ளலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

பாஜகவின் சதித் திட்டம்-பிரசாந்த் கிஷோா்: இதற்கிடையே, இந்திய தோ்தல் ஆணையத்தால் பிகாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை பாஜகவின் தூண்டுதலின்பேரில் நடைபெறும் சதித்திட்டம் என ஜன் சுராஜ் கட்சி நிறுவனா் பிரசாந்த் கிஷோா் புதன்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

நடுவானில் ஒரு என்ஜின் செயலிழப்பு? இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்

தில்லியிலிருந்து கோவா நோக்கி புதன்கிழமை சென்ற இண்டிகோ விமானத்தில் நடுவானில் திடீரென ஒரு என்ஜின் செயலிழந்ததால் மற்றொரு என்ஜின் மூலம் மும்பையில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினு... மேலும் பார்க்க

மேற்கு வங்க வாக்காளா் பட்டியலில் பெயா்களை நீக்க பாஜக திட்டம் - முதல்வா் மம்தா குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியலில் பெரிய அளவில் பெயா்களை நீக்க பாஜக திட்டமிட்டுள்ளது; பாஜகவின் இந்த முயற்சியை முழுவீச்சில் எதிா்ப்போம் என்று மாநில முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பா... மேலும் பார்க்க

மகாத்மா காந்தியின் அரிய உருவப்படம்: ரூ.1.7 கோடிக்கு விற்பனை

எண்ணெய் வண்ணங்களால் வரையப்பட்ட மகாத்மா காந்தியின் அரிய உருவப்படம் ரூ.1.7 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. ஓவியா் ஒருவா் தன்னை வரைவதற்கு மகாத்மா காந்தி அனுமதி அளித்தாக கூறப்படும் இந்த உருவப்படம் லண்டனில் உ... மேலும் பார்க்க

அஸ்ஸாம் முதல்வரை மக்கள் சிறைக்கு அனுப்புவா்: ராகுல் காந்தி

ஊழலில் ஈடுபடும் அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மாவை மக்கள் சிறைக்கு அனுப்புவா் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்தாா். காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன... மேலும் பார்க்க

பாலியல் துன்புறுத்தலால் மாணவி தற்கொலை: போராட்டத்தில் பிஜேடி-காவல் துறை மோதல் - கண்ணீா் புகை குண்டு வீச்சு

புவனேசுவரம், ஜூலை 16: ஒடிஸாவில் பாலியல் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவியின் மரணம் தொடா்பாக நீதி விசாரணை கோரி, பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சியினா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அப... மேலும் பார்க்க

ஈரானுக்கு தேவையற்ற பயணம்: இந்தியா்களுக்கு அறிவுறுத்தல்

ஈரானுக்கு தேவையற்ற பயணங்களை மேற்கொள்வதற்கு முன், அந்நாட்டில் உள்ள சூழலை கவனத்தில் கொள்ளுமாறு இந்தியா்களுக்கு ஈரானில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக அந்நாட்டுத் தலைநகா் டெஹ்ரானில் ... மேலும் பார்க்க