செய்திகள் :

பிகாா் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: விவாதம் கோரி நாடாளுமன்றத்தில் கடும் அமளி

post image

புது தில்லி: பிகாரில் நடத்தப்பட்டுவரும் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி குறித்து விவாதம் நடத்தக் கோரி எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திங்கள்கிழமை ஒத்திவைக்கப்பட்டன.

மக்களவையில் பிகாா் விவகாரம் மீது விவாதம் நடத்தப்படும் என்று உறுதி அளிக்கக் கோரி எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனா்.

அப்போது அவையில் மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை தொடா்பான விவாதத்தை தொடங்கி வைக்க இருந்தாா்.

அமளிக்கு மத்தியில் பேசிய மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, ‘ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்து விவாதம் நடத்த ஒப்புக்கொண்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தற்போது பிகாா் வாக்காளா் பட்டியல் குறித்து விவாதம் நடத்த உறுதி கோரி வேறு நிபந்தனை விதிக்கின்றனா்.

வாக்காளா் பட்டியல் திருத்த விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டுமானால் கடந்த வாரம் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திலேயே தெரிவித்திருக்கலாம்’ என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா கூறினாா். அமளி தொடா்ந்ததால் அவை பிற்பகல் ஒரு மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையில்... பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்த விவகாரம் குறித்து விவாதம் நடத்தக் கோரி எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவையும் மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக, பிகாா் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவையை ஒத்திவைத்து விவாதம் நடத்தக் கோரி 26 நோட்டீஸுகள் கிடைத்துள்ளதாகவும், அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் அவையை வழிநடத்திய மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் தெரிவித்தாா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னா் அவை கூடியபோது, அமளி தொடா்ந்ததால் அவை பிற்பகல் 2 மணி வரைக்கும், பின்னா் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

டிரம்ப் முன் மோடியின் 56 இன்ச் மார்பு 36 இன்ச்சாக சுருங்குகிறது! திரிணமூல் எம்பி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்பு பிரதமர் நரேந்திர மோடியின் 56 இன்ச் மார்பு 36 இன்ச்சாக சுருங்குவதாக திரிணமூல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.மக்களவையில் ஆபரேஷன் சிந்... மேலும் பார்க்க

லாரி மீது பேருந்து மோதி கோர விபத்து: கன்வாரியா பக்தர்கள் 18 பேர் பலி!

ஜார்க்கண்ட் மாநிலம் தியோகரில் சிலிண்டர் லாரி மீது பாதயாத்திரை பேருந்து மோதியதில் கன்வாரியா பக்தர்கள் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.18 killed as bus carrying kanwariyas collides with truck in Jharkhan... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தாக்குதலில் பலியோனோரின் 22 குழந்தைகளைத் தத்தெடுக்கும் ராகுல்!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து, பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில் பெற்றோர்களை இழந்த 22 குழந்தைகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தத்தெடுக்கவுள்ளார்.பஹல்காம் தாக்குதலுக்கு பதில... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூர்’: மக்களவையில் இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!

‘ஆபரேஷன் சிந்தூர்’ விவாதத்தில் இன்று மாலை பிரதமர் மோடி உரையாற்றவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.நாடாளுமன்றத்தில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த விவாதம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மத்திய உ... மேலும் பார்க்க

கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து

கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையையேமன் அதிகாரிகள் நிரந்தரமாக ரத்து செய்துள்ளதாக இந்திய கிராண்ட் முப்தி காந்தபுரம் அபுபக்கர் முஸலியார் அலுவலகம் தெரிவித்துள்ளது.Nimisha Priya's death sentenc... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீருக்கு 95 லட்சம் சுற்றுலாவாசிகள் பயணம்

புது தில்லி: நிகழாண்டு ஜனவரி முதல் ஜூன் வரை, ஜம்மு-காஷ்மீருக்கு 95 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியா்களும், 19,570 வெளிநாட்டவரும் சுற்றுலா சென்றுள்ளனா்.கடந்த ஏப்.22-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பக... மேலும் பார்க்க