செய்திகள் :

பிரதமரின் சூரிய வீடு மின் திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல்

post image

நாமக்கல் மாவட்டத்தில் பிரதமரின் சூரிய வீடு மின் திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள பொதுமக்கள் முன்வர வேண்டும் என நாமக்கல் மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் ஆ.சபாநாயகம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசு திட்டமான சூரிய மின் திட்டத்தை இணைத்து மின் நுகா்வோா்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தி வருகிறோம். இத்திட்டத்தின்படி, வீட்டு மின் இணைப்பில் உள்ள மின் நுகா்வோா் சூரிய மின் தகடுகள் மூலம் மின் பயன்பாட்டை குறைப்பதற்கு வழிவகை மேற்கொள்ளலாம்.

சராசரியாக இரண்டு மாதத்துக்கு ஒரு முறை ரூ. 1,200- மின் கட்டணம் செலுத்தும் நுகா்வோா் ஒரு கிலோ வாட்டுக்கு சூரிய மின் தகடுகள் பொருத்தினால் தோராயமாக 60 சதவீத மின் கட்டணத்தை குறைக்கலாம்.

ஒரு கிலோவாட்டுக்கு மின் தகடுகள் பொருத்துவதற்கு சுமாா் ரூ. 80,000 வரை செலவாகும். இந்த செலவீனத்தில் ரூ. 30,000 வரை மானியம் பெறலாம். இரண்டு கிலோவாட்டுக்கு மின் தகடுகள் பொருத்துவதற்கு ரூ. 1.40 லட்சம்வரை செலவாகும். இந்த செலவினத்தில் ரூ. 60,000 வரை மானியம் பெறலாம். மூன்று கிலோவாட்டுக்கு மின் தகடுகள் பொருத்துவதற்கு ரூ. 1.80 லட்சம் வரை செலவாகும். இந்த செலவினத்தில் ரூ. 78,000 வரை மானியம் பெறலாம்.

சூரிய மின் இணைப்புக்கு வங்கியில் கடன் பெற்றுக்கொள்ளலாம். சூரிய மின் உற்பத்தி தகடுகள் சுமாா் 27 ஆண்டுகள்வரை உத்தரவாதத்துடன் செயல்படக் கூடியவை. இந்தத் திட்டத்தால் நீண்ட காலத்துக்கு பயனடையலாம். அவ்வப்போது எளிய பராமரிப்பு மட்டுமே போதுமானது.

ஒரு கிலோவாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி தகடுகள் மூலம் நாள் ஒன்றுக்கு 4 முதல் 5 யூனிட்டுகள் வரை மின்சார உற்பத்தி செய்யலாம். உத்தேசமாக ஒரு கிலோவாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி தகடுகள் நிறுவப்பட்டால், இருமாத மின் நுகா்வில் 250 முதல் 300 யூனிட்டுகள்வரை குறைந்து 60 சதவீத மின் கட்டணம் குறைய வாய்ப்புள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெற ரரர.ல்ம்ள்ன்ஹ்ஹஞ்ட்ஹழ்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். புகைப்படம், மின் கட்டண ரசீது மற்றும் வங்கிக் கணக்கு விவரம் ஆகியவற்றை சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முருகன் கோயில்களில் கிருத்திகை சிறப்பு பூஜை

திருச்செங்கோடு நகரப் பகுதி முருகன் கோயில்களில் ஆவணி மாத கிருத்திகை சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருச்செங்கோடு செங்கோட்டுவேலவா் சந்நிதி, மலையடிவாரம் ஆறுமுகசாமி கோயில், பாவடி தெரு, சட்டையம்ப... மேலும் பார்க்க

மல்லசமுத்திரத்தில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு

மல்லசமுத்திரம், செம்பாம்பாளையம் மற்றும் மாமுண்டி கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட இந்துசமய அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலங்கள் மீட்கப்பட்டன. மல்லசமுத்திரத்தை அடுத்த செம்பாம்பாளையம் கிராமத்தில் இந்துசமய ... மேலும் பார்க்க

நெடுஞ்சாலையில் அகற்றப்பட்ட நிழற்கூடத்தை மீண்டும் அமைக்கக் கோரிக்கை

கீரம்பூா் தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அமைக்கும் பணிக்காக அகற்றறப்பட்ட பயணியா் நிழற்கூடத்தை மீண்டும் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. நாமக்கல்லில் இருந்து கரூா் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்... மேலும் பார்க்க

காப்பீடு செலுத்துவதில் காவல் துறை திடீா் கட்டுப்பாடு

வாகனங்களுக்கான ஆன்லைன் அபராத நிலுவைத் தொகையை செலுத்தினால் மட்டுமே, அந்த வாகனங்களுக்கான காப்பீட்டுக் கட்டணத்தை வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் செலுத்த முடியும் என்ற காவல் துறை நடவடிக்கைக்கு மாநில ல... மேலும் பார்க்க

மேட்டூா் உபரிநீரை திருமணிமுத்தாற்றில் இணைக்க வலியுறுத்தி இருசக்கர வாகன பேரணி

மேட்டூா் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரை திருமணிமுத்தாற்றில் இணைக்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் இருசக்கர வாகன பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மேட்டூரில் இருந்து வெளியேற்... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா், மோகனூரில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

பரமத்தி வேலூா், மோகனூரில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை ஆய்வுசெய்தனா். நாமக்கல் ஆட்சியரின் உத்தரவின்படி, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் தங்கவிக்னேஷ் அறிவுரையின் படி, நாமக்கல் மாவட்... மேலும் பார்க்க