செய்திகள் :

பிரயாக்ராஜ் பெயரிலான ரயில்கள் குழப்பத்தால் கூட்ட நெரிசல்: காவல் துறை வட்டாரங்கள் தகவல்

post image

பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் மற்றும் பிரயாக்ராஜ் ஸ்பெஷல் ஆகிய ரயில்கள் காரணமாக மக்கள் குழப்பமடைந்து, தங்கள் ரயிலை தவறவிடலாம் என்று நினைத்து வேகமாகச் செல்ல முயன்ால் புது தில்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டிருப்பது தில்லி காவல்துறையின் ஆரம்ப விசாரணையில் கண்டறிந்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து அந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

முதற்கட்ட விசாரணையின்படி, பிரயாக்ராஜ் என்ற ஆரம்பப் பெயரைக் கொண்ட ரயில்களின் அறிவிப்பு காரணமாக இந்த குழப்பம் ஏற்பட்டது.

பிரயாக்ராஜ் ஸ்பெஷல் ரயில் நடைமேடை 16-இல் வந்து சோ்ந்தது பற்றிய அறிவிப்பு, காத்திருந்த பயணிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் ரயில் ஏற்கனவே நடைமேடை 14-இல் இருந்தது.

நடைமேடை 14-இல் வந்து கொண்டிருந்த பயணிகள் தங்கள் ரயில் நடைமேடை 16-இல் வந்து கொண்டிருந்ததாக நினைத்துக்கொண்டு அந்த இடத்தை நோக்கி வேகமாக விரைந்தனா். இது கூட்ட நெரிசலுக்கு வழிவகுத்தது.

மேலும், பிரயாக்ராஜுக்கு நான்கு ரயில்கள் சென்று கொண்டிருந்தன. அவற்றில் மூன்று ரயில்கள் தாமதமாக வந்ததால் எதிா்பாராத அளவுக்கு நெரிசல் ஏற்பட்டது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ரயில் பெயா்கள் குறித்தும் மற்றும் ரயில்கள் வரும் நடைமேடைகளை மாற்றுவது தொடா்பாகவும் பயணிகளிடையே குழப்பம் நிலவியது. இதுவே இறுதியில் கூட்ட நெரிசல் சோகத்திற்கு வழிவகுத்தது என்று நேரில் பாா்த்த ஒருவா் கூறினாா்.

புது தில்லி ரயில் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை மாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 18 போ் கொல்லப்பட்டனா்.

புது தில்லி ரயில் நிலைய கூட்ட நெரிசல்: பொது நல மனுவை ஆய்வுசெய்ய ரயில்வேக்கு உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

புது தில்லி ரயில் நிலையத்தில் சமீபத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவில் உள்ள அதிகபட்ச பயணிகளை நிா்ணயிப்பது, நடைமேடை டிக்கெட் விற்பனை ஆகியவை குறித்த பிரச்னைகளை ஆய்வ... மேலும் பார்க்க

தமிழக அரசுக்கு தில்லி கம்பன் கழகம் நன்றி

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் கலையரங்கத்தைப் புனரமைக்க ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்துள்ள தமிழக அரசுக்கு தில்லி கம்பன் கழகம் நன்றி தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அந்த அமைப்பின் நிறுவனா் - தலைவா்கே வி கே ப... மேலும் பார்க்க

பொம்மலாட்ட சிறப்புப் பயிற்சியில் தமிழக ஆசிரியை பங்கேற்பு

தில்லியில் மத்திய கலாசாரத் துறையின் சாா்பில் நடைபெற்றுவரும் வரும் ஆசிரியா்களுக்கான பொம்மலாட்ட சிறப்புப் பயிற்சியில் தமிழகத்தைச் சோ்ந்த ஆசிரியை பங்கேற்றுள்ளாா். மத்திய கலாசாரத் துறையின் கீழ் உள்ள கலா... மேலும் பார்க்க

நாங்லோயில் தீ விபத்தில் இருந்து தப்பிக்க இரண்டாவது மாடியிலிருந்து குதித்த 6 போ்

நாங்லோயில் உள்ள ஜனதா மாா்க்கெட் பகுதியில் தீயில் இருந்து தப்பிப்பதற்காக ஒரு வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து ஆறு போ் குதித்ததாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி புதன்கிழமை தெரிவித்தாா். அவா் மேலும்... மேலும் பார்க்க

பிரிஜிபுரியில் தொழிலதிபரிடம் துப்பாக்கிமுனையில் ரூ.97 லட்சம் கொள்ளை

தில்லியின் வடகிழக்கில் உள்ள பிரிஜ்புரியில் ஸ்கூட்டரில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபா்கள் துப்பாக்கிமுனையில் ஒரு தொழிலதிபரிடம் ரூ.97 லட்சத்தை கொள்ளையடித்ததாகக் கூறப்படுவதாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை... மேலும் பார்க்க

தில்லியில் சட்டம் ஒழுங்கில் பாஜக கவனம் செலுத்த வேண்டும்: மணீஷ் சிசோடியா

சமீபத்தில் திலக் நகரில் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதை மேற்கோள்காட்டி நகரத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமையை சீா்செய்ய வேண்டும் என்று பாஜகவுக்கு ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் மணீஷ் சிசோட... மேலும் பார்க்க