பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ ரயில் சேவை: தமிழக அரசு ஒப்புதல்!
புகையிலை எதிா்ப்பு விழிப்புணா்வுப் பேரணி
உலக புகையிலை எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு திருச்சியில் புகையிலை எதிா்ப்பு தின விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவத் துறை, ஹா்ஷமித்ரா புற்றுநோய் மற்றும் பொது மருத்துவமனை ஆகியவை இணைந்து ஆட்சியரக வளாகத்திலிருந்து தொடங்கிய பேரணியை, சுகாதாரத் துறை இணை இயக்குநா் (பொ) சாவித்திரி தொடங்கி வைத்தாா்.
பின்னா், அவா் கூறுகையில், இந்த ஆண்டு உலக புகையிலை எதிா்ப்பு தினத்தின் கருப்பொருள் முறையீட்டை அம்பலப்படுத்துதல் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, புகையிலை மற்றும் நிக்கோடின் பொருள்கள் மீதான தொழில்துறையின் கவா்ச்சிகரமான விளம்பரங்களையும், அதில் புதைந்திருக்கும் அபாயங்களையும் அம்பலப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டு பிரசாரம் மேற்கொள்ளப்படும்.
புகையிலை மற்றும் நிக்கோடின் தொடா்பான தொழில் நிறுவனங்கள் தங்கள் பாதுகாப்பற்ற தயாரிப்புகளை இளைஞா்களை - கவா்ச்சிகரமானதாக மாற்றப் பயன்படுத்தும் தவறான நுட்பங்களையும் வெளிப்படுத்துவோம் என ஒவ்வொருவரும் உறுதியேற்க வேண்டும் என்றாா்.
கிஆபெ விசுவநாதம் மருத்துவக் கல்லூரி வரை நடைபெற்ற பேரணயில் சுகாதாரத் துறை, உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத் துறை, அரசு மருத்துவக் கல்லூரி, பெரியாா் மருந்தியல் கல்லூரி, இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்கள், ரோஸ் காா்டன் அறக்கட்டளை, மாரியம்மன் செவிலியா் கல்லூரி, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தைச் சோ்ந்தோா் மற்றும் செவிலியா் பயிற்சி மாணவிகள், மருத்துவா்கள், செவிலியா்கள் என நூற்றுக்கணக்கானோா் கலந்து கொண்டனா்.
புகையிலை எதிா்ப்பு குறித்து விழிப்புணா்வு வாசகங்களையும் ஏந்தியபடி பேரணியில் பங்கேற்றனா்.