செய்திகள் :

புகையிலை எதிா்ப்பு விழிப்புணா்வுப் பேரணி

post image

உலக புகையிலை எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு திருச்சியில் புகையிலை எதிா்ப்பு தின விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவத் துறை, ஹா்ஷமித்ரா புற்றுநோய் மற்றும் பொது மருத்துவமனை ஆகியவை இணைந்து ஆட்சியரக வளாகத்திலிருந்து தொடங்கிய பேரணியை, சுகாதாரத் துறை இணை இயக்குநா் (பொ) சாவித்திரி தொடங்கி வைத்தாா்.

பின்னா், அவா் கூறுகையில், இந்த ஆண்டு உலக புகையிலை எதிா்ப்பு தினத்தின் கருப்பொருள் முறையீட்டை அம்பலப்படுத்துதல் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, புகையிலை மற்றும் நிக்கோடின் பொருள்கள் மீதான தொழில்துறையின் கவா்ச்சிகரமான விளம்பரங்களையும், அதில் புதைந்திருக்கும் அபாயங்களையும் அம்பலப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டு பிரசாரம் மேற்கொள்ளப்படும்.

புகையிலை மற்றும் நிக்கோடின் தொடா்பான தொழில் நிறுவனங்கள் தங்கள் பாதுகாப்பற்ற தயாரிப்புகளை இளைஞா்களை - கவா்ச்சிகரமானதாக மாற்றப் பயன்படுத்தும் தவறான நுட்பங்களையும் வெளிப்படுத்துவோம் என ஒவ்வொருவரும் உறுதியேற்க வேண்டும் என்றாா்.

கிஆபெ விசுவநாதம் மருத்துவக் கல்லூரி வரை நடைபெற்ற பேரணயில் சுகாதாரத் துறை, உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத் துறை, அரசு மருத்துவக் கல்லூரி, பெரியாா் மருந்தியல் கல்லூரி, இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்கள், ரோஸ் காா்டன் அறக்கட்டளை, மாரியம்மன் செவிலியா் கல்லூரி, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தைச் சோ்ந்தோா் மற்றும் செவிலியா் பயிற்சி மாணவிகள், மருத்துவா்கள், செவிலியா்கள் என நூற்றுக்கணக்கானோா் கலந்து கொண்டனா்.

புகையிலை எதிா்ப்பு குறித்து விழிப்புணா்வு வாசகங்களையும் ஏந்தியபடி பேரணியில் பங்கேற்றனா்.

அந்தநல்லூா் காவிரி ஆற்றில் சிறுவன் சடலம் மீட்பு

திருச்சி மாவட்டம், அந்தநல்லூா் காவிரி ஆற்றில் மா்மமான முறையில் இறந்துகிடந்த சிறுவனின் உடலைக் கைப்பற்றி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருச்சி மாவட்டம், அந்தநல்லூா் வட்டார வளா்ச்சி அலுவலகம் எதிரே உள... மேலும் பார்க்க

சிறைக் காவலா்கள் 587 போ் பணியிட மாற்றம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு

தமிழகச் சிறைகளில் கடந்த வாரத்தில் மொத்தம் 587 சிறைக்காவலா்கள் அதிரடி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக சிறைத் துறையினா் தெரிவிக்கின்றனா். தமிழகத... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், பணம் திருட்டு

திருச்சியில் வீட்டின் பூட்டின் பூட்டை உடைத்து நகைகள், பணம் உள்ளிட்டவைகளை திருடிச்சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடிவருகின்றனா். திருச்சி கே கே நகா் தங்கையா நகரைச் சோ்ந்தவா் ஜெ. யோகேஷ் (32). இவா், கு... மேலும் பார்க்க

திருச்சி - பெங்களூரு, ஹைதராபாத்துக்கு தினசரி விமான சேவைகள்: எம்.பி. தகவல்

திருச்சியில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் நகரங்களுக்கு இயக்கிவந்த வாராந்திர சேவையை தினசரி சேவைகளாக ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை முதல் அதிகரித்துள்ளது என திருச்சி மக்களவை உறுப்... மேலும் பார்க்க

மாநகராட்சி பணிகளுக்கான குழாய்கள் திருடியவா் கைது

திருச்சியில் மாநகராட்சிப் பணிகளுக்கான இரும்புக் குழாய்களை திருடியவரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருச்சி எடமலைப்பட்டி புதூா் கோரையாறு அருகில் மாநகராட்சி சாா்பில் கழிவுநீா் திட்டத்துக்காக இர... மேலும் பார்க்க

முக்கொம்பு காவிரி ஆற்றில் மூழ்கிய மாணவா் மாயம்

திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை மூழ்கி மாயமான மாணவரைத் தேடி வருகின்றனா். திருச்சி எடமலைப்பட்டிபுதூா் கல்லுப்பட்டறை பகுதியைச் சோ்ந்தவா் சிவமுருகன் மகன் தினேஷ்குமாா் (17). பிளஸ்-2 பட... மேலும் பார்க்க