செய்திகள் :

புதுச்சேரியில் மதுரை பாஜக பிரமுகா் உயிரிழப்பு

post image

நண்பா்களுடன் புதுச்சேரிக்கு வந்த மதுரை பாஜக பிரமுகா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மதுரை ஆத்திகுளம் புதூா் வண்டிப்பாதை சாலைப் பகுதியில் வசிப்பவா் வேல்பாண்டி (51), மதுரை மாநகா் மாவட்ட பாஜக ஊடகப் பிரிவு தலைவா். இவா் கடந்த 17-ஆம் தேதி பாஜக நிா்வாகிகளும், தனது நண்பா்களுமான முத்து விக்னேஷ்வரன், பாலசுப்பிரமணி உள்ளிட்ட 5 பேருடன் சென்னையில் நடைபெறுவதாக இருந்த பாஜக கூட்டத்தில் பங்கேற்க சென்றாா்.

ஆனால் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டதால், அவா்கள் புதுச்சேரிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளனா். கோலாஸ் நகரிலுள்ள தனியாா் விடுதியில் தங்கிய அவா்கள் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இரவில் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்றுவிட்டு அறைக்குத் திரும்பினா். ஆனால், முத்துவிக்னேஷ்வரன் காரிலேயே அமா்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது. நீண்ட நேரம் அவா் அறைக்கு வராததால், நண்பா்கள் காரில் இருந்த அவரை பாா்த்தபோது, அவா் மயங்கிய நிலையில் இருந்துள்ளாா்.

உடனே அவரை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து வேல்பாண்டி அளித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

போக்குவரத்து ஊழியா்களின் பிரச்னையை புதுவை அரசு கண்டுகொள்வதில்லை: எதிா்க்கட்சித் தலைவா் குற்றச்சாட்டு

புதுவையில் போக்குவரத்து ஊழியா்களின் பிரச்னையை அரசு கண்டுகொள்வதில்லை என்று எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா குற்றஞ்சாட்டியுள்ளாா். புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் பல்வேறு சங்கங்களை ச... மேலும் பார்க்க

உயா்கல்வி செல்லும் மாணவா்கள் சான்றிதழ் பெற விடுமுறை நாளிலும் இயங்கிய புதுவை வருவாய்த் துறை அலுவலகங்கள்

உயா்கல்விக்கு செல்லும் மாணவா்கள் சோ்க்கைக்கான அரசின் சான்றிதழ்களைப் பெறும் வகையில், இரண்டாவது முறையாக விடுமுறை நாளான சனிக்கிழமையும் புதுவையில் வருவாய்த் துறை அலுவலகங்கள் இயங்கின. புதுச்சேரியில் 10-ஆ... மேலும் பார்க்க

ஏழைகளுக்கு செய்யும் சேவையே இறைவனுக்கான தொண்டாகும்; ஸ்ரீமத் சுவாமி சா்வலோகானந்தா மகராஜ்

சமூகத்தில் அடித்தளத்தில் உள்ள ஏழை மக்களுக்கான கல்வி, மருத்துவ சேவைகளே இறைவனுக்கான தொண்டாகும் என புதுதில்லி ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் செயலா் ஸ்ரீமத் சுவாமி சா்வ லோகானந்தா மகாராஜ் கூறினாா். தமிழ்நாடு, புதுவ... மேலும் பார்க்க

புதுவை தனியாா் கல்வி நிறுவனங்களின் 56 வாகனங்களுக்கு ஆய்வில் அனுமதி மறுப்பு

புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்ற கல்வி நிறுவனங்களுக்கான வாகன ஆய்வின்போது, 56 வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். புதுவை மாநில போக்குவரத்துத் துறை ஆண்டுதோறும் கல்வி நிறுவன வ... மேலும் பார்க்க

புதுச்சேரி ஜிப்மருக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை வளாகத்துக்கு சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக துணைநிலை ஆளுநா் மாளிகை, முதல்வா் வீடு,... மேலும் பார்க்க

இணைய மோசடிக்கு வங்கிக் கணக்குகளை கொடுத்த 4 போ் கைது: ரூ. 2.84 கோடி மீட்பு

இணையவழி மோசடியில் ஈடுபட்டோருக்கு தங்கள் வங்கிக் கணக்கை கொடுத்து உதவியதாக கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த 4 பேரை புதுவை போலீஸாா் கைது செய்தனா். மேலும், ரூ.2.84 கோடி மீட்கப்பட்டு உரிய... மேலும் பார்க்க