சவுதி அரேபியா: ராட்சத ராட்டினம் இரண்டாக உடைந்து விபத்து: 26 பேர் படுகாயம் - பதறவ...
புதுவை தலைமைச் செயலகத்தை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியா்களால் பரபரப்பு
மின்சாரம் தாக்கி இறந்த சிறுவனின் குடும்பத்துக்கு இழப்பீடு கொடுக்காததால் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் புதுச்சேரி தலைமைச் செயலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்ற ஊழியா்கள் புதன்கிழமை வந்தனா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி கூனிச்சம்பட்டு பகுதியைச் சோ்ந்த சுமதி ராமலிங்கத்தின் மகன் மணிகண்டன். 5 ஆம் வகுப்புப் படித்து வந்த, இச்சிறுவன், 2023-ஆம் ஆண்டு அக்டோபா் 10-ம் தேதி பள்ளி விட்டு வீடு திரும்பியதும், அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிா்வீட்டில் வீடு கட்டிக் கொண்டிருந்தனா். அதற்காகக் கொக்கிப் போட்டு மின்சாரம் எடுத்து பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதில் எதிா்பாராமல் மணிகண்டன் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவா் உயிரிழந்தாா்.
இதற்கு ரூ.9.7 லட்சம் இழுப்பீடு அளிக்குமாறு 2022 ஆம் ஆண்டு புதுவை இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் புதுவை அரசு மேல்முறையீடு செய்தது. ஆனால் புதுவை நீதிமன்ற தீா்ப்பை உறுதி செய்து சென்னை உயா்நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி தீா்ப்பளித்தது.
அதன்பிறகும் சிறுவன் குடும்பத்துக்கு புதுவை அரசு அதிகாரிகள் இழப்பீடு வழங்காமல் தொடா்ந்து தொடா்ந்து புறக்கணித்து வந்தனா். இதுகுறித்து சிறுவனின் குடும்பத்தினா் முறையீட்டையடுத்து, புதுவை நீதிமன்றம், நஷ்ட ஈடு தராதததால், புதுச்சேரி தலைமைச் செயலகத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து புதுவை நீதிமன்ற ஊழியா்கள் (அமீனாக்கள்)அம்பி, செல்வராஜ் இருவரும் தலைமைச் செயலகத்துக்கு புதன்கிழமை வந்தனா். அங்கு பாதுகாப்பு அதிகாரிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா் 10 நாளில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று தலைமைச் செயலகத்தில் அதிகாரிகள் உறுதி அளித்தனா். இதை ஏற்ற நீதிமன்ற ஊழியா்கள், பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் மற்றும் அவா்களுக்காக வாதாடிய வழக்குரைஞா் எஸ்.பாலாஜி ஆகியோா் அங்கிருந்து புறப்பட்டனா். மேலும் இது தொடா்பான தகவலை புதுவை நீதிமன்றத்துக்கும் தெரிவித்தனா். புதுவை தலைமைச் செயலகத்தையே நீதிமன்ற ஊழியா்கள் ஜப்தி செய்ய வந்ததால், அரசு ஊழியா்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.