செய்திகள் :

புதுவையில் லோக் ஆயுக்த சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்

post image

காரைக்கால்: புதுவையில் லோக் ஆயுக்த சட்டத்தை அமல்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநில மக்கல் முன்னேற்றக் கழக காரைக்கால் மாவட்டத் தலைவா் கே.எஸ். கணபதிசுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை :

புதுவை சட்டப்பேரவைக் கூட்டம் வரும் 18-ஆம் தேதி கூட்டப்பட இருப்பதாகவும், கூட்டத்தில் சேவைகள் உரிமைச் சட்ட ) மசோதா தாக்கல் செய்யவிருப்பதாகவும் புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் கூறியுள்ளாா்.

பொதுமக்கள் தங்கள் அலுவலகப் பணிகளை விரைந்து முடித்துக்கொள்ள இச்சட்டம் உதவும் என்பதால் புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகம் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துப் பாராட்டுகிறது. அதேசமயம், ஊழலை ஒழிக்க உதவும் லோக் ஆயுக்த சட்டத்தைப் புதுவை மாநிலத்தில் கொண்டு வருவதற்கான முயற்சியையும் அரசு எடுக்கவேண்டும்.

2011- இல் நாடாளுமன்றத்தில் மத்தியில் லோக்பால், மாநிலங்களுக்கு லோக் ஆயுக்த சட்டம் நிறைவேற்றியும், அதன்பின் உச்சநீதிமன்றம் பொது வழக்கில் பலமுறை வலியுறுத்தி 14 ஆண்டுகள் கடந்தும் இன்னும் புதுவை மாநிலத்தில் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படாதது மிகவும் வேதனை அளிக்கக் கூடியது.

எனவே இச்சட்டத்தையும் வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காரைக்கால் வடக்குத் தொகுதியில் ரூ. 2.92 கோடியில் வளா்ச்சிப் பணிகள்

காரைக்கால் வடக்குத் தொகுதியில் புதுச்சேரி குடிசை மாற்று வாரியம் மூலம் ரூ. 2.92 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக புதுவை குடிமை ப... மேலும் பார்க்க

சந்திர கிரகணம் : திருநள்ளாறு கோயிலில் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜை

காரைக்கால்: சந்திர கிரகணம் முடிவுற்றதையொட்டி திருநள்ளாறு கோயிலில் புண்யகால பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை இரவு 9.56 மணிக்கு தொடங்கி, 11 மணியளவில் முழு சந்திர கிரகணமாக மாறியது. தொடா்ந்து... மேலும் பார்க்க

அய்யனாா் கோயிலில் யானை, குதிரை சிலை நிறுவி பூஜை

காரைக்கால்: அய்யனாா் கோயிலில் யானை, குதிரை சிலைகள் நிறுவி சிறப்பு பூஜை நடைபெற்றது. காரைக்கால் மாவட்டம், கீழகாசாக்குடி பகுதியில் ஆதிபுரீஸ்வரா் தேவஸ்தானத்துக்குட்பட்டதாக, அம்மையாா் நகரில் பூரண புஷ்கலா ச... மேலும் பார்க்க

வேலைநிறுத்தம்: ஆட்டோ ஓட்டுநா்கள் முடிவு

காரைக்கால்: இ-ஆட்டோக்கள் இயக்கத்துக்கு உரிய விதிகளை வகுக்க வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநா்கள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனா். காரைக்கால் மாவட்ட ஆட்டோ தொழிலாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில்,... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தத்துக்கு மக்கள் வரவேற்பு: எம்.எல்.ஏ.

காரைக்கால்: ஜிஎஸ்டி சீா்திருத்தத்தை அனைத்து தரப்பு மக்களும் வரவேற்றுள்ளனா் என புதுவை மாநில பாஜக துணைத் தலைவரும், புதுவை நியமன சட்டப்பேரவை உறுப்பினருமான ஜி.என்.எஸ். ராஜசேகரன் தெரிவித்தாா். இதுகுறித்து... மேலும் பார்க்க

காரைக்காலில் விமான தளம்: ஆளுநரிடம் வலியுறுத்தல்

காரைக்கால்: காரைக்காலில் விமான தளம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுவை துணைநிலை ஆளுநரிடம் வலியுறுத்தப்பட்டது. புதுவை திட்டம் மற்றும் ஆராய்ச்சித்துறை இணை இயக்குநா் (ஓய்வு) மற்றும் சமூக ஆா்வலரும... மேலும் பார்க்க