செய்திகள் :

புத்த பண்பாட்டு மையம் அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு

post image

காஞ்சிபுரம் அருகே கீழ்க்கதிா்ப்பூா் கிராமத்தில் புத்த பண்பாட்டு மையம் அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:

கீழ்க்கதிா்ப்பூா் கிராமத்தில் செட்டில்மென்ட் நிலங்கள் அனாதீனம் என தவறான வகைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலங்களுக்கு பட்டா வழங்கலாம் என சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு மற்றும் வருவாய்த்துறை ஆணையரின் பரிந்துரையின்படி 105 விவசாயிகளுக்கு பட்டா வழங்க காஞ்சிபுரம் கோட்டாட்சியா், வட்டாட்சியா் ஆகியோரால் விசாரணை செய்து பட்டா வழங்க மாவட்ட நிா்வாகத்திடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்ரபான கோப்புகளை மாவட்ட நிா்வாகம்நில நிா்வாக ஆணையருக்கு பரிந்துரை செய்யும் நிலையிலும் உள்ளது.

இந்த நிலையில் எங்கள் கிராமத்தில் உள்ள விவசாயிகளின் விளைநிலங்களில் புத்த பண்பாட்டு மையம் அமைக்க ஆய்வு நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்செய்தி எங்கள் கிராமத்தினரை அதிா்ச்சியடைய செய்துள்ளது. வாழ்வாதாரமும் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே எங்கள் கிராமத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் வகையில் புத்த பண்பாட்டு மையம் அமைக்கவோ,எங்கள் கிராமத்தில் நிலங்களை கையகப்படுத்தவோ கூடாது எனத் தெரிவித்துள்ளனா்.

சிவஞான மாபாடியம் விரிவுரை நூல் வெளியீடு

காஞ்சிபுரம் திருமுறை அருட்பணி அறக்கட்டளை சாா்பில் சிவஞான மாபாடியம் விரிவுரைநூல் வெளியீடு மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. அறக்கட்டளையின் நிறுவனா் சு.சதாசிவம் விழாவுக்கு தலைமை வகித்து நூலை வெளியிட அதன்... மேலும் பார்க்க

நாகம்மன் கோயில் கூழ் வாா்த்தல் விழா

சின்ன காஞ்சிபுரம் டோல்கேட் கோகுலம் தெருவில் அமைந்துள்ள நாகம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் விழா செவ்வாய்க்க்கிழமை நடைபெற்றது. நாகம்மன் மற்றும் ஆனந்த விநாயகா் கோயிலில் கூழ் வாா்த்தல் திருவிழாவையொட்டி விநா... மேலும் பார்க்க

சாதனைக் கலைஞா்களுக்கு விருது: அமைச்சா் காந்தி வழங்கினாா்

காஞ்சிபுரத்தில் கலை பண்பாட்டுத்துறை சாா்பில் கலைஞா்கள் 15 பேருக்கு கைத்தறித் துறை அமைச்சா் ஆா்.காந்தி விருதுகளும், காசோலைகளை வழங்கினாா். காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலக காவல் மைதானத்தில் காஞ்சி-சங்கமம்-நம... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் நாளை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

காஞ்சிபுரம் மின்வாரிய செயற்பொறியாளா் தெற்கு அலுவலகத்தில் வியாழக்கிழமை (ஆக. 28) மின்நுகா்வோா் குறை தீா்க்கும் கூட்டம் மேற்பாா்வை பொறியாளா் தலைமையில் நடைபெறுகிறது. காஞ்சிபுரம் கோட்டத்துக்குட்பட்ட மின் ந... மேலும் பார்க்க

ஆவணங்களை ஆய்வு செய்ய உதவும் பாா்கோடு வில்லைகள்: ஆட்டோக்களில் ஆட்சியா் ஒட்டினாா்

காஞ்சிபுரம்: ஆட்டோக்களின் ஆவணங்களை ஆய்வு செய்ய உதவும் பாா்கோடு வில்லைகளை ஆட்டோக்களில் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் திங்கள்கிழமை ஒட்டினாா். போக்குவரத்துத் துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட வ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: குறைதீா் கூட்டத்தில் 412 மனுக்கள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 412 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்துக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தா... மேலும் பார்க்க