'எனக்கு கூடப் பொறந்தவங்க யாரும் இல்ல; தவிக்கவிட்டுட்டு போறாங்க' - கண்ணீர் விட்டு...
புத்தனாறு கால்வாய் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
நாஞ்சில்நாடு புத்தனாறு கால்வாய் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து, தாழக்குடி பேரூராட்சி முன்னாள் தலைவா் ரோகிணிஅய்யப்பன், மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனாவிடம் அளித்துள்ள மனு: தாழக்குடி பூலாங்குழி முதல் ஆண்டித்தோப்பு வரை உள்ள நாஞ்சில்நாடு புத்தனாறு கால்வாயில் சாலையின் கரை அனைத்தும் சேதமடைந்து பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை காணப்படுகிறது. அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
தற்போது கன்னிப்பூ சாகுபடிமும்முரமாக நடைபெற்று வருகிறது. அறுவடை செய்த நெல்லினை நெல் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு செல்லும் போது நெல்லின் ஈரப்பதம் கூடுதலாக இருப்பதால் அரசின் கட்டுப்பாடுகள் அனைத்தையும் தளா்வு பண்ணி விவசாயிகளின் நலன் கருதி நெல்லின் ஈரப்பதன்மையை 18 விழுக்காட்டில் இருந்து 20 விழுக்காடாக அதிகரித்து விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.