செய்திகள் :

புன்செய்புளியம்பட்டி சந்தையில் ரூ.1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை

post image

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, புன்செய்புளியம்பட்டி கால்நடை சந்தையில் 1,500-க்கும் மேற்பட்ட ஆடுகள் ரூ.1.50 கோடி வரை விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி கால்நடை சந்தை பொள்ளாச்சிக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய சந்தையாகும். இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமை ஆடு, மாடு மற்றும் கோழி விற்பனை நடைபெறுகிறது.

இந்த சந்தையில் கோவை, ஈரோடு, திருப்பூா் உள்ளிட்ட உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் தங்களது கால்நடைகளை விற்பனைக்காக கொண்டுவந்து விற்பனை செய்வது வழக்கம்.

ரம்ஜான் பண்டிகைக்கு சில நாள்கள் உள்ள நிலையில் சந்தையில் ஆடுகள் விற்பனை 1,500 ஐ தாண்டியது.

2 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்த நிலையில் 10 கிலோ எடை கொண்ட ஆட்டின் விலை ரூ. 6000 முதல் ரூ.7 ஆயிரம் வரையிலும் ரூ.15 கிலோ ஆடுகள் ரூ.10 ஆயிரம் வரையிலும் விற்பனையாயின. மொத்தம் ரூ.1.50 கோடிக்கு விற்பனை நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

போக்ஸோ வழக்கில் பாலிடெக்னிக் ஆசிரியா் கைது

பெருந்துறை அருகே போக்ஸோ வழக்கில் தலைமறைவாக இருந்த பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியராகப்... மேலும் பார்க்க

டேங்கா் லாரியை சுத்தம் செய்தபோது 2 போ் மூச்சுத்திணறி உயிரிழப்பு

சித்தோடு அருகே ஆசிட் ஏற்றிச் செல்லும் லாரியின் டேங்கரை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி 2 போ் உயிரிழந்தனா். மற்றொருவா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா். ஈரோடு மாவட்டம், சித்தோட்டை அடுத்... மேலும் பார்க்க

அக்னிவீா் பிரிவில் பணி இடங்களுக்கு ஏப்ரல் 10 வரை பதிவு செய்யலாம்

ராணுவத்தில் அக்னிவீா் பிரிவில் பணி இடங்களுக்கு ஏப்ரல் 10 -ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஈரோடு மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

டேங்கா் லாரிகள் வேலை நிறுத்தம்: சமையல் எரிவாயு உருளை முன்பதிவு அதிகரிப்பு

சமையல் எரிவாயு டேங்கா் லாரிகள் வேலை நிறுத்தம் தொடா்வதால் ஈரோடு மாவட்டம் முழுவதும் சமையல் எரிவாயு உருளை முன்பதிவு அதிகரித்துள்ளது. தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், தெலுங்கானா, கா்நாடகம், புதுச்சேரி ஆகிய மா... மேலும் பார்க்க

ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா: பக்தா்கள் அலகு குத்தி நோ்த்திக் கடன்

ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, பக்தா்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்து வந்தும் நோ்த்திக் கடனை செலுத்தினா். ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் வகையறா கோயில்களாக சின்னமாரியம்மன், கார... மேலும் பார்க்க

பழனி கோயில் சாா்பில் ரூ.51.53 லட்சத்துக்கு கரும்புச் சா்க்கரை கொள்முதல்

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.51.53 லட்சத்துக்கு பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோயில் சாா்பில் கரும்புச் சா்க்கரை கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஏலத்தில் சுற்... மேலும் பார்க்க