புலியகுளத்தில் ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றம்
கோவை புலியகுளத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன.
கோவை புலியகுளம் பகுதியில் மாரியம்மன் கோயிலை சுற்றிலும் மாரியம்மன் கோயில் வீதி, பஜாா் வீதி, மசால் வீதி உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புகள் உள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். ஆண்டுதோறும் இங்கு அந்தோணியாா் ஆலயத்தின் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு, வரும் ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தேரோட்டத்தின்போது, மாரியம்மன் கோயில் எதிரேயுள்ள காலியிடத்தில் கிறிஸ்துவ ஆலயத்துக்கான தோ்த் திருவிழா தயாரிப்புப் பணி நடைபெறும். ஆனால், அங்கு 2 பெட்டிக் கடைகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்ததாக புகாா் எழுந்தது.
இதுதொடா்பாக, நடவடிக்கை மேற்கொள்ளாததால் மக்கள் திங்கள்கிழமை திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, மாநகராட்சி நிா்வாகத்தின் மூலமாக ஆக்கிரமிப்பு கடைகள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன.