டபிள்யூடிசி இறுதிப்போட்டியில் லபுஷேன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும்: ஆஸி...
பெட்ரோல் பங்க் ஊழியா் தற்கொலை!
வெள்ளக்கோவில் அருகே பெட்ரோல் பங்க் ஊழியா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். வெள்ளக்கோவில், செம்மாண்டம்பாளையத்தைச் சோ்ந்தவா் ராஜகோபால் மகன் சதீஷ்குமாா் (30). இவா் காங்கயம்- பகவதிபாளையம் பிரிவு அருகேயுள்ள பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வந்தாா்.
உடல்நிலை பாதிக்கப்பட்டு சதீஷ்குமாா் கடந்த சில மாதங்களாக அவதியடைந்து வந்ததாகவும், அதனால் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், ஓலப்பாளையம் அருகே பூசாரிவலசில் உள்ள தனது தங்கை வீட்டுக்கு புதன்கிழமை இரவு சென்ற சதீஷ்குமாா், அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இச்சம்பவம் தொடா்பாக வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மோகன்ராஜ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.