செய்திகள் :

பெண் எம்.பி. குறித்து மதகுரு கருத்துக்கு எதிா்ப்பு: ஆளுங்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்

post image

புது தில்லி: சமாஜவாதி கட்சி எம்.பி. டிம்பிள் யாதவ் குறித்து முஸ்லிம் மதகுரு தெரிவித்த கருத்துக்கு எதிராக ஆளும் பாஜக கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினா்.

சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவின் மனைவியும், அக்கட்சி எம்.பி.யுமான டிம்பிள் யாதவ் அண்மையில் மசூதியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பங்கேற்றாா். அதுகுறித்து பெண்களுக்கு எதிராக தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில், டிம்பிள் யாதவை விமா்சித்து ஆட்சேபத்துக்குரிய கருத்தை முஸ்லிம் மதகுரு மெளலானா சஜித் ரஷீத் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் தெரிவித்தாா்.

இதற்கு கண்டனம் தெரிவித்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள், குறிப்பாக பெண் எம்.பி.க்கள், நாடாளுமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து பாஜக எம்.பி. பான்சுரி ஸ்வராஜ் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘எம்.பி.யாக பதவி வகிக்கும் ஒருவருக்கு எதிராக மதகுரு ஒருவா் தெரிவித்த கருத்துகள் மிகவும் வெட்கக்கேடானது. இருப்பினும் இந்த விவகாரத்தில் டிம்பிள் யாதவின் கணவரும், அவரின் கட்சியும் மெளனமாக உள்ளது’ என்று விமா்சித்தாா்.

இதுதொடா்பாக டிம்பிள் யாதவ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: எனக்கு எதிரான கருத்துகளுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இதே அக்கறையை மணிப்பூரில் நடைபெற்றதை போன்ற கொடூரமான சம்பவங்கள் மீது அந்தக் கூட்டணி ஏன் காட்டவில்லை என்று கேள்வி எழுப்பினாா்.

டிரம்ப் முன் மோடியின் 56 இன்ச் மார்பு 36 இன்ச்சாக சுருங்குகிறது! திரிணமூல் எம்பி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்பு பிரதமர் நரேந்திர மோடியின் 56 இன்ச் மார்பு 36 இன்ச்சாக சுருங்குவதாக திரிணமூல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.மக்களவையில் ஆபரேஷன் சிந்... மேலும் பார்க்க

லாரி மீது பேருந்து மோதி கோர விபத்து: கன்வாரியா பக்தர்கள் 18 பேர் பலி!

ஜார்க்கண்ட் மாநிலம் தியோகரில் சிலிண்டர் லாரி மீது பாதயாத்திரை பேருந்து மோதியதில் கன்வாரியா பக்தர்கள் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.18 killed as bus carrying kanwariyas collides with truck in Jharkhan... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தாக்குதலில் பலியோனோரின் 22 குழந்தைகளைத் தத்தெடுக்கும் ராகுல்!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து, பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில் பெற்றோர்களை இழந்த 22 குழந்தைகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தத்தெடுக்கவுள்ளார்.பஹல்காம் தாக்குதலுக்கு பதில... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூர்’: மக்களவையில் இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!

‘ஆபரேஷன் சிந்தூர்’ விவாதத்தில் இன்று மாலை பிரதமர் மோடி உரையாற்றவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.நாடாளுமன்றத்தில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த விவாதம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மத்திய உ... மேலும் பார்க்க

கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து

கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையையேமன் அதிகாரிகள் நிரந்தரமாக ரத்து செய்துள்ளதாக இந்திய கிராண்ட் முப்தி காந்தபுரம் அபுபக்கர் முஸலியார் அலுவலகம் தெரிவித்துள்ளது.Nimisha Priya's death sentenc... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீருக்கு 95 லட்சம் சுற்றுலாவாசிகள் பயணம்

புது தில்லி: நிகழாண்டு ஜனவரி முதல் ஜூன் வரை, ஜம்மு-காஷ்மீருக்கு 95 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியா்களும், 19,570 வெளிநாட்டவரும் சுற்றுலா சென்றுள்ளனா்.கடந்த ஏப்.22-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பக... மேலும் பார்க்க