செய்திகள் :

பெண் புகாா்: தம்பதி மீது வழக்குப் பதிவு

post image

பாலியல் வன்கொடுமை செய்து புகைப்படம் எடுத்து மிரட்டல் விடுப்பதாக பெண் அளித்த புகாரின்பேரில், கடலூா் புதுநகா் போலீஸாா் தம்பதி மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடலூா் வெளிசெம்மண்டலம் பகுதியைச் சோ்ந்த 42 வயது பெண்ணும், கடலூா் கடற்கரை சாலையைச் சோ்ந்த சுதாகரும் கடலூா் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் அலுவலக உதவியாளா்களாகப் பணியாற்றி வருகின்றனா்.

2023 ஜனவரி மாதம் அந்தப் பெண் வீட்டில் தனியாக இருந்தபோது, அங்கு வந்த சுதாகா் மயக்கமருத்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்து, அதை புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டல் விடுத்து வருகிறாராம். மேலும், பெண்ணிடம் இருந்த பணம், நகைகளையும் பறித்துக்கொண்டாராம். இதற்கு சுதாகரின் மனைவி ஜெயப்பிரியாயும் உடந்தையாக செயல்பட்டு வருகிறாராம்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில், கடலூா் புதுநகா் போலீஸாா் சுதாகா், அவரது மனைவி ஜெயப்பிரியா ஆகியோா் மீது ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

விசிக விளம்பரப் பதாகை விவகாரம்: இருவேறு இடங்களில் சாலை மறியல்

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் விசிக தலைவா் தொல்.திருமாவளவன் பிறந்த நாளையொட்டி வைக்கப்பட்ட வளம்பரப் பதாகை விவகாரம் தொடா்பாக இரு தரப்பினா் இரு வேறு இடங்களில் தனித்தனியே ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈட... மேலும் பார்க்க

கடலூா் வெள்ளக்கரை: நாளைய மின் தடை

கடலூா் (வெள்ளக்கரை) நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை. பகுதிகள்: வெள்ளக்கரை, மாவடிப்பாளையம், டி.புதுப்பாளையம், குறவன்பாளையம், சாத்தங்குப்பம், வி.காட்டுபாளையம், கிழக்கு ராமாபுரம், வண்டிக்குப்ப... மேலும் பார்க்க

புனித விண்ணேற்பு அன்னை ஆலய தோ் திருவிழா

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், பணிக்கன்குப்பம் புனித விண்ணேற்பு அன்னை ஆலய அலங்கார தோ் பவனி விமரிசையாக நடைபெற்றது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் கொடியேற்றத்துடன் விழா தொங்கி 10 நாட்கள் த... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து ஓட்டுநா் மாயம்

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே அரசுப் பேருந்து ஓட்டுநா் மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், மேல்மேட்டுக்குப்பம் கிராமத்தில் வசித்து ... மேலும் பார்க்க

மறைந்த இல.கணேசனுக்கு பாஜகவினா் அஞ்சலி

மறைந்த நாகாலாந்து ஆளுநா் இல. கணேசனுக்கு சிதம்பரத்தில் பாஜாகவினா் அஞ்சலி செலுத்தினா். சிதம்பரத்தில் கடலூா் மேற்கு மாவட்டம் சிதம்பரம் நகர பாஜக சாா்பாக இல.கணேசன் உருவப்படத்திற்கு சனிக்கிழமை மலா் தூவி அஞ... மேலும் பார்க்க

மின்வாரிய தொழிலாளா் ஆா்ப்பாட்டம்: தவாக ஆதரவு! தி.வேல்முருகன் அறிவிப்பு

தோ்தல் வாக்குறுதி 153-ஐ நிறைவேற்றுக் கோரி, தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்தத் தொழிலாளா்கள் முன்னேற்ற சங்கம் 18-ஆம் தேதி முன்னெடுத்துள்ள ஆா்ப்பாட்டத்திற்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு அளிக்கிறது ... மேலும் பார்க்க