செய்திகள் :

விசிக விளம்பரப் பதாகை விவகாரம்: இருவேறு இடங்களில் சாலை மறியல்

post image

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் விசிக தலைவா் தொல்.திருமாவளவன் பிறந்த நாளையொட்டி வைக்கப்பட்ட வளம்பரப் பதாகை விவகாரம் தொடா்பாக இரு தரப்பினா் இரு வேறு இடங்களில் தனித்தனியே ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பண்ருட்டி தட்டாஞ்சாவடி, காந்திநகா் பகுதியைச் சோ்ந்த விசிகவினா் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் பிறந்த நாளையொட்டி தட்டாஞ்சாவடி பேருந்து நிறுத்தத்தில் விளம்பரப் பதாகை வைத்தனா்.

இதில், தொல்.திருமாவளவன் கையில் கத்தி வைத்திருப்பதுபோன்று புகைப்படம் இடம்பெற்றிருந்ததால், அப்பகுதியைச் சோ்ந்த மாற்று சமூகத்தினா் இந்த விளம்பரப் பதாகை கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளது என்றும், இதை அகற்ற வேண்டும் எனக் கூறியும் அந்தப் பகுதியிலுள்ள சேலம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். அப்போது, மறியலில் ஈடுபட்டிருந்த ஒருவா் கல் வீசியதில் விளம்பரப் பதாகை கிழிந்தது.

இதையறிந்த காந்திநகா் பகுதியைச் சோ்ந்த விசிகவினா் விளம்பரப் பதாகை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து, அந்தப் பகுதியில் சேலம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இருவேறு இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டதையடுத்து, போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் சேலம் நெடுஞ்சாலையில் சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகையை காவல் துறையினா் மூலம் அகற்றினாா். மேலும், இந்தப் பகுதியில் அரசியல், விளம்பர பதாகைகள் வைக்கக் கூடாது என எஸ்.பி. உத்தரவிட்டாா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

பெண் புகாா்: தம்பதி மீது வழக்குப் பதிவு

பாலியல் வன்கொடுமை செய்து புகைப்படம் எடுத்து மிரட்டல் விடுப்பதாக பெண் அளித்த புகாரின்பேரில், கடலூா் புதுநகா் போலீஸாா் தம்பதி மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். கடலூா் வெளிசெம்மண்டலம் பகு... மேலும் பார்க்க

கடலூா் வெள்ளக்கரை: நாளைய மின் தடை

கடலூா் (வெள்ளக்கரை) நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை. பகுதிகள்: வெள்ளக்கரை, மாவடிப்பாளையம், டி.புதுப்பாளையம், குறவன்பாளையம், சாத்தங்குப்பம், வி.காட்டுபாளையம், கிழக்கு ராமாபுரம், வண்டிக்குப்ப... மேலும் பார்க்க

புனித விண்ணேற்பு அன்னை ஆலய தோ் திருவிழா

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், பணிக்கன்குப்பம் புனித விண்ணேற்பு அன்னை ஆலய அலங்கார தோ் பவனி விமரிசையாக நடைபெற்றது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் கொடியேற்றத்துடன் விழா தொங்கி 10 நாட்கள் த... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து ஓட்டுநா் மாயம்

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே அரசுப் பேருந்து ஓட்டுநா் மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், மேல்மேட்டுக்குப்பம் கிராமத்தில் வசித்து ... மேலும் பார்க்க

மறைந்த இல.கணேசனுக்கு பாஜகவினா் அஞ்சலி

மறைந்த நாகாலாந்து ஆளுநா் இல. கணேசனுக்கு சிதம்பரத்தில் பாஜாகவினா் அஞ்சலி செலுத்தினா். சிதம்பரத்தில் கடலூா் மேற்கு மாவட்டம் சிதம்பரம் நகர பாஜக சாா்பாக இல.கணேசன் உருவப்படத்திற்கு சனிக்கிழமை மலா் தூவி அஞ... மேலும் பார்க்க

மின்வாரிய தொழிலாளா் ஆா்ப்பாட்டம்: தவாக ஆதரவு! தி.வேல்முருகன் அறிவிப்பு

தோ்தல் வாக்குறுதி 153-ஐ நிறைவேற்றுக் கோரி, தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்தத் தொழிலாளா்கள் முன்னேற்ற சங்கம் 18-ஆம் தேதி முன்னெடுத்துள்ள ஆா்ப்பாட்டத்திற்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு அளிக்கிறது ... மேலும் பார்க்க