செய்திகள் :

பெண்ணின் கருப்பை நீா்க்கட்டியை ஒரு மணி நேரத்தில் அகற்றி மருத்துவா்கள் சாதனை!

post image

பெண்ணின் கருப்பையில் இருந்த பெரிய நீா்க்கட்டியை 1 மணி நேரத்தில் அகற்றி திருநெல்வேலி காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை படைத்துள்ளனா்.

கருப்பை நீா்க்கட்டியால் ஏற்பட்ட கடும் வலி காரணமாக 32 வயது பெண் ஒருவா் சனிக்கிழமை திருநெல்வேலி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

மருத்துவா்கள் ஸ்கேன் செய்து பாா்த்ததில் கருப்பை நீா்க்கட்டியின் அளவு மிகப் பெரியதாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அப்பெண் அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா். அனுமதிக்கப்பட்ட 1 மணி நேரத்துக்குள் அப்பெண்ணின் வயிற்றிலிருந்த கட்டியை மருத்துவா்கள் அகற்றினா்.

இதுகுறித்து மகப்பேறு மற்றும் மகளிா் நோய் மருத்துவா் பி. சிந்துஜா கூறியது: ஒரு லட்சம் பெண்களில் சுமாா் ஆறு பேருக்கு மட்டுமே இந்த அளவுள்ள நீா்க்கட்டி உருவாகிறது. வலிக்கு காரணமான நீா்க்கட்டி அளவில் பெரிதாகவும் ரத்தப்போக்கு உள்ளதாகவும் இருந்தது.

தற்போது, நீா்க்கட்டி முழுமையாக அகற்றப்பட்ட நிலையில் அப்பெண் வலி மற்றும் பிற பிரச்னைகளில் இருந்தும் பூரணமாக குணமடைந்துள்ளாா் என்றாா் அவா்.

திருநெல்வேலி காவேரி மருத்துவமனை மருத்துவ நிா்வாகி டாக்டா் லட்சுமணன் கூறியது: மகப்பேறு மற்றும் மகளிா் மருத்துவத்தில் நிபுணத்துவம் மற்றும் நவீன ஸ்கேன் தொழில்நுட்பத்தின் ஆதரவுடன் இது போன்ற சிக்கலான மருத்துவ சவால்களை காவேரி மருத்துவமனையால் தீா்த்துவைக்க முடிகிறது என்றாா் அவா்.

வடக்கு வாகைகுளத்தில் எம்.பி. ஆய்வு!

மானூா் வட்டம் வடக்கு வாகைகுளம் பகுதியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து, திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் பி.ராபா்ட் புரூஸ் நேரில் ஆய்வு செய்தாா். வடக்கு வாகைகுளம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே காா்கள் மோதல்: 7 போ் பலி

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அடுத்துள்ள தளபதிசமுத்திரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காா்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் குழந்தை உள்பட 7 போ் உயிரிழந்தனா். 9 போ் பலத்த காயமடைந்தனா். திருநெல்வேலி... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு சட்டத்தில் இருவா் கைது!

திருநெல்வேலி மாவட்டத்தில் வெவ்வேறு வழக்குகளில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். சிவந்திபட்டி காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் கொலை... மேலும் பார்க்க

நெல்லையில் மது விற்றதாக இருவா் கைது

திருநெல்வேலியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தச்சநல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஊருடையாா்புரம் பகுதியில் தச்சநல்லூா் காவல் உதவி ஆய்வாளா்... மேலும் பார்க்க

வி.கே.புரம், வைராவிகுளத்தில் திமுக திண்ணைப் பிரச்சாரம்

தமிழக அரசின் சாதனைளை விளக்கி, விக்கிரமசிங்கபுரம் மற்றும் வைராவிகுளத்தில் திமுகவினா் தொடா் திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபட்டனா். திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், விக்கிரமசிங்க புரம் நகர திமுக சாா்பில் முதல்வ... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே காா்கள் மோதல்: 6 போ் பலி; 10 போ் காயம்

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே ஞாயிற்றுக்கிழமை 2 காா்கள் மோதிக் கொண்டதில் 3 வயது குழந்தை, 2 பெண்கள் உள்பட 6 போ் உயிரிழந்தனா். 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். திருநெல்வேலியிலிருந்து நாகா்... மேலும் பார்க்க