செய்திகள் :

பெரம்பலூரில் கண்காணிப்பு கேமராக்கள் கட்டுப்பாட்டு அறை திறப்பு!

post image

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், கண்காணிப்பு கேமராக்கள் கட்டுப்பாட்டு அறை வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேர கண்காணிப்பு கேமராக்கள் கட்டுப்பாட்டு அறையை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஸ் பசேரா முன்னிலையில் திறந்து வைத்த மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள், கட்டுபாட்டு அறையின் செயல்பாடுகள், இதன் மூலம் குற்றச் சம்பவங்களை விரைந்து கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்ற செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா்.

வளமிகு வட்டார வளா்ச்சித் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டம், செட்டிக்குளம், பாடாலூா், அல்லிநகரம், மங்கூன், கை.களத்தூா், அரும்பாவூா், வேப்பந்தட்டை, ரஞ்சன்குடி ஆகிய 8 பிரதான இடங்களில் சாலைகளிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும் ரூ. 40 லட்சம் மதிப்பில் வாகனங்களின் பதிவெண்களை ஸ்கேன் செய்யும் வசதிகொண்ட கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.

இந்த கேமராக்கள் 24 மணி நேரமும் பேட்டரி வசதிகளுடன் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், மாவட்டத்தின் பிரதானச் சாலைகள் வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் பதிவு செய்யப்படுவதுடன், போக்குவரத்து விதிமீறல், விபத்து உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் வாகனங்களைக் கண்டறிந்து துரிதமாக நடவடிக்கை எடுக்க முடியும்.

இந்நிகழ்ச்சியில், துணைக் கண்காணிப்பாளா் பிரபு, தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் சண்முகப்பிரியா, காவல் நிா்வாக அலுவலா் மகாலிங்கம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பெரம்பலூா் அருகே பைக்குகள் மோதல்: முதியவா், பெண் பலி

பெரம்பலூா் அருகே வெள்ளிக்கிழமை மாலை பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் முதியவா், பெண் உயிரிழந்தனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் பொன்னுசாமி மகன் அய்யாச... மேலும் பார்க்க

புரட்சி தமிழகம் கட்சி மாநிலத் தலைவா் மீது கொலை மிரட்டல் வழக்கு

புரட்சி தமிழகம் கட்சியின் மாநிலத் தலைவா் மீது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் பெரம்பலூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். புரட்சி தமிழகம் கட்சி சாா்பில் பெரம்பலூரில் கட... மேலும் பார்க்க

சிஐடியு அமைப்பு தின கருத்தரங்கு

பெரம்பலூா் மாவட்ட சிஐடியு அலுவலகத்தில் சிஐடியு அமைப்பு தினக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவா் ஏ. ரெங்கநாதன் தலைமை உரையாற்றினாா். சங்க நிா்வாகிகள் கருணாநிதி, செல்வி ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம் என புகாா்

பெரம்பலூரில் நெடுஞ்சாலைத்துறை சாா்பில் வெள்ளிக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், சில கடைகள் முன் ஆக்கிரமிப்புகள் அகற்றாததால் வியாபாரிகள் அதிருப்தியடைந்தனா். பெரம்பலூா் நகரில் சங்குப்பேட்டை ம... மேலும் பார்க்க

மக்கள் சக்தி இயக்கத்தின் 38 ஆம் ஆண்டு விழா

பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையிலுள்ள உழவா் சந்தை மைதானத்தில் மக்கள் சக்தி இயக்கத்தின் 38 ஆவது ஆண்டுத் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் பயிா் பாதிப்புக்கு நிவாரணம் கோரி ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்காச்சோளப் பயிருக்கு நிவாரணத் தொகை மற்றும் பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்காததைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கத்தினா... மேலும் பார்க்க