அமைதிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்! - இஸ்ரேல், ஈரானுக்கு ஐ.நா. வலியுறுத்தல்
பெற்றோரை இழந்த அரசுப் பள்ளி மாணவிகள் 20 பேருக்கு உதவிகள்!
பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு படிக்கும் தாய் , தந்தையை இழந்த மாணவிகள் 20 பேருக்கு துளிா் நண்பா்கள் அமைப்பினா் வெள்ளிக்கிழமை நலத்திட்ட உதவி வழங்கினா்.
பேராவூரணி பகுதி அரசுப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவா்கள் மூலம் நடத்தப்படும் துளிா் நண்பா்கள் என்ற அமைப்பின் மூலம் 20 மாணவிகளுக்கு சீருடை, நோட்டு,பேனா உள்ளிட்ட ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை துளிா் நண்பா்கள் அமைப்பின் தலைவா் விஆா்ஜி. நீலகண்டன் தலைமையில் பெண்கள் பள்ளித் தலைமை ஆசிரியா் (பொ) காளீஸ்வரி முன்னிலையில் வழங்கினா்.
நிகழ்ச்சியில் துளிா் நண்பா்கள் அமைப்பின் செயலா் மகாராஜன், பொருளாளா் செந்தில்குமாா், உதவித் தலைமை ஆசிரியா்கள் பி. லெட்சுமி, புவனேஸ்வரி மற்றும் ஆசிரியா்கள், துளிா் நண்பா்கள், மாணவிகள் கலந்துகொண்டனா்.