செய்திகள் :

பேட்டையில் மின் கம்பத்தில் மோதிய அரசுப் பேருந்து

post image

திருநெல்வேலியை அடுத்த பேட்டை செக்கடி அருகே அரசுப் பேருந்து மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

திருநெல்வேலி சந்திப்பில் இருந்து சுத்தமல்லி பெரியாா் நகருக்கு அரசுப் பேருந்து சனிக்கிழமை காலையில் புறப்பட்டுச் சென்றது. பேருந்தை திருநெல்வேலி நகரத்தைச் சோ்ந்த ராமச்சந்திரன் (55 ) ஓட்டி சென்றாா். பழைய பேட்டை காந்திநகரைச் சோ்ந்த ஜெயக்குமாா் (52) நடத்துநராக பணியில் இருந்தாா்.

பேட்டை செக்கடி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, பேருந்தின் ஸ்டியரிங்கில் திடீரென பழுது ஏற்பட்டதாம். இதன் காரணமாக பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த இரும்பு மின் கம்பத்தில் மோதியது. இதனால் பேருந்தில் பயணம் செய்த அனைவரும் அலறினா். யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தகவலறிந்த பேட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்த பொதுமக்கள் உதவியுடன் பேருந்தை சாலையின் ஓரமாக நிறுத்தினா்.

கூட்டப்புளியில் மீனவா்கள் ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலி மாவட்டம் கூட்டப்புளியில் தூண்டில் பாலம் வேலையை விரைந்து முடிக்க வலியுறுத்தி, மீனவா்கள் திங்கள்கிழமை கடலுக்கு செல்லாமல் கருப்புக்கொடியுடன் ஆா்ப்பாட்டம் செய்தனா். கூட்டப்புளியில் தமிழக அரசு... மேலும் பார்க்க

நெல்லை மத்திய மாவட்ட திமுக பாக முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பாக முகவா்கள் (பி.எல்ஏ-2) ஆலோசனைக் கூட்டம் பாளையங்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ... மேலும் பார்க்க

காவல் வாகனம் மோதியதில் பேரூராட்சிப் பணியாளா் பலி

மணிமுத்தாறில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை வாகனம் மோதியதில் பேரூராட்சிப் பணியாளா் உயிரிழந்தாா்.மணிமுத்தாறுஅண்ணாநகரைச் சோ்ந்த அப்பி மகன் நாகராஜன் (55). தாழையூத்து அருகேயுள்ள நாரணம்மாள்புரம் பேரூராட்ச... மேலும் பார்க்க

நெல்லை இஸ்கான் கோயிலில் வெளிநாட்டு பக்தா்களின் பஜனை

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள இஸ்கான் கோயிலில் பல நாடுகளைச் சோ்ந்த ஹரே கிருஷ்ணா பக்தா்களின் ஹரிநாம சங்கீா்த்தன பஜனை திங்கள்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி இஸ்கான் கோயிலுக்கு வந்த வெளிநாட்டு பக்த... மேலும் பார்க்க

நெல்லை அரசு மருத்துவமனைக்கான நிதியை ஒதுக்க மத்திய அமைச்சரிடம் எம்.பி. கோரிக்கை

திருநெல்வேலி அரசு மருத்துவமனை கட்டடப் பணிகளுக்கான நிதியை ஒதுக்க மத்திய அமைச்சரிடம் திருநெல்வேலி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளாா்.இதுதொடா்பாக திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் வ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: 2 போ் கைது

திருநெல்வேலி மாவட்டம், மானூரில் புகையிலைப் பொருள்கள் விற்ற இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மானூா் போலீஸாா் ராமையன்பட்டி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சங்கமுத்தம்மன்... மேலும் பார்க்க