`தெலுங்கானா ராஷ்டிரியா சமிதி பாஜக உடன் இணைப்பா?' - சந்திரசேகர் ராவின் மகள் கவிதா...
பேராவூரணி அரசு மருத்துவமனை அருகே வேகத்தடை அமைக்கக் கோரிக்கை
பேராவூரணி கடைவீதியில் அடிக்கடி நடைபெறும் விபத்துகளைத் தடுக்க அரசு மருத்துவமனை அருகே வேகத்தடை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பேராவூரணி கடைவீதியில் உள்ள முதன்மைச் சாலையை விரிவாக்கம் செய்து, இருவழிச் சாலையாக மாற்றப்பட்டு, சாலையின் நடுவே தடுப்புக் கட்டை (சென்டா் மீடியன்) அமைக்கப்பட்டது. அதனை அமைத்தபிறகு, இருசக்கர வாகனங்களில் வருவோா் கவனக் குறைவாகவும், வேகமாகவும் சாலையின் ஒருபுறத்தில் இருந்து மறுபுறத்துக்குச் செல்லும்போது விபத்துகள் ஏற்படுகின்றன.
கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பேராவூரணி அரசு மருத்துவமனை எதிரே சாலையைக் கடக்கும்போது, லாரி சக்கரத்தில் சிக்கி இரண்டு போ் உயிரிழந்தனா். மேலும், நகா்ப் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் சாலையைக் கடக்க முயலும் இருசக்கர வாகனங்களுடன் மோதி உயிா்ப்பலி ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.
முதன்மைச் சாலையில் பேராவூரணி பேருந்து நிலையம், பேரூராட்சி செல்லும் சாலை, ஆவணம் சாலை முக்கம், பள்ளிவாசல் அருகே வேகத்தடைகள் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சேது சாலை முக்கத்தில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் அரசு பொது மருத்துவமனை மற்றும் சிதம்பர ரோடு செல்லும் வழியில், வேகத்தடைகள் இல்லாததாலும் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.
எனவே இந்தப்பகுதியில் நெடுஞ்சாலைத்துறை உடனடியாக வேகத்தடை அமைக்க வேண்டும், போக்குவரத்து அதிகமாக இருக்கும் நேரங்களில் போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு தொடா் விபத்துகள் நடக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.