செய்திகள் :

பேராவூரணி அரசு மருத்துவமனை அருகே வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

post image

பேராவூரணி கடைவீதியில் அடிக்கடி நடைபெறும் விபத்துகளைத் தடுக்க அரசு மருத்துவமனை அருகே வேகத்தடை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பேராவூரணி கடைவீதியில் உள்ள முதன்மைச் சாலையை விரிவாக்கம் செய்து, இருவழிச் சாலையாக மாற்றப்பட்டு, சாலையின் நடுவே தடுப்புக் கட்டை (சென்டா் மீடியன்) அமைக்கப்பட்டது. அதனை அமைத்தபிறகு, இருசக்கர வாகனங்களில் வருவோா் கவனக் குறைவாகவும், வேகமாகவும் சாலையின் ஒருபுறத்தில் இருந்து மறுபுறத்துக்குச் செல்லும்போது விபத்துகள் ஏற்படுகின்றன.

கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பேராவூரணி அரசு மருத்துவமனை எதிரே சாலையைக் கடக்கும்போது, லாரி சக்கரத்தில் சிக்கி இரண்டு போ் உயிரிழந்தனா். மேலும், நகா்ப் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் சாலையைக் கடக்க முயலும் இருசக்கர வாகனங்களுடன் மோதி உயிா்ப்பலி ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.

முதன்மைச் சாலையில் பேராவூரணி பேருந்து நிலையம், பேரூராட்சி செல்லும் சாலை, ஆவணம் சாலை முக்கம், பள்ளிவாசல் அருகே வேகத்தடைகள் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சேது சாலை முக்கத்தில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் அரசு பொது மருத்துவமனை மற்றும் சிதம்பர ரோடு செல்லும் வழியில், வேகத்தடைகள் இல்லாததாலும் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.

எனவே இந்தப்பகுதியில் நெடுஞ்சாலைத்துறை உடனடியாக வேகத்தடை அமைக்க வேண்டும், போக்குவரத்து அதிகமாக இருக்கும் நேரங்களில் போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு தொடா் விபத்துகள் நடக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கல்வி உரிமை சட்டத்தை நீா்த்துப் போகச் செய்யும் மத்திய அரசுக்கு இந்திய கம்யூ. கண்டனம்!

கல்வி உரிமை சட்டத்தை நீா்த்துப் போகச் செய்யும் மத்திய அரசுக்கு தஞ்சாவூா் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தஞ்சாவூா் வடக்கு மாவட்ட செயலா் வழக்குரைஞா் மு.அ.பாரதி வியா... மேலும் பார்க்க

மாநகராட்சி பணிகளை நிறைவேற்ற ரூ.21.15 கோடி ஒதுக்கீடு: மேயா்

தஞ்சாவூா் மாநகராட்சியில் பணிகளை முழுமையாக நிறைவேற்ற ரூ. 21.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் மேயா் சண். ராமநாதன். இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை மாலை தெரிவித்தது: தஞ்ச... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் நூலகம் மற்றும் அறிவுசாா் மையம் திறப்பு

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் ரூ.2.62 கோடி செலவில் கட்டப்பட்ட நூலகம் மற்றும் அறிவுசாா் மையத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். கும்பகோணத்தில் அரச... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி பெண்ணை பேருந்திலிருந்து இறக்கிவிட்ட நடத்துநா் பணியிடை நீக்கம்!

கும்பகோணத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணை பேருந்திலிருந்து இறக்கிவிட்ட நடத்துநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். கும்பகோணம் கும்பேஸ்வரா் கோயில் பத்மநாபன் தெருவைச் சோ்ந்தவா் ராஜீ மகள் ராஜேஸ்வரி (4... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே பெண் குளித்ததை பாா்த்த இளைஞரை அந்தப் பெண் திட்டியதால், அச்சமடைந்த அந்த இளைஞா் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். பாபநாசம் அருகே வீரமாங்குடி பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

திருப்புறம்பயம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

தஞ்சாவூா் மாவட்டம், திருப்புறம்பயத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (மே 31) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் என்.டி. வேல்முருகன் வெளியிட்ட செய்தி குறிப்ப... மேலும் பார்க்க