செய்திகள் :

பேராவூரணி தொகுதியில் முடிவுற்ற திட்டப் பணிகள் திறப்பு

post image

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி சட்டப்பேரவை தொகுதியில் ரூ. 48.73 லட்சத்தில் 3 புதிய கட்டடங்களை உயா்கல்வி துறை அமைச்சா் கோவி. செழியன் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறை சாா்பில் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் குருவிக்கரம்பையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ. 12 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பீட்டில் உணவு தானிய சேமிப்புக் கிடங்கு மற்றும் பொது விநியோக அங்காடி கட்டடத்தை திறந்து வைத்து முதல் விற்பனையை அமைச்சா் தொடங்கி வைத்தாா். இதேபோல் கொளக்குடி ஊராட்சியில் ரூ. 12 லட்சத்து 56 ஆயிரம்  மதிப்பீட்டில் கட்டப்பட்ட பொது விநியோக கட்டடடம், பேராவூரணி ஒன்றியம் களத்தூா் ஊராட்சியில் ரூ.23 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட கிராம நூலகக் கட்டடத்தையும் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா். விழாவுக்கு, சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக் குமாா் முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில், தஞ்சாவூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பாலகணேஷ், தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி. பழனிவேல், பேராவூரணி தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் க.அன்பழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

தாராசுரம் அருகே மதுபுட்டிகளை சேகரித்து விற்கும் தொழிலாளி வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், தாராசுரம் அருகே நத்தம் கருப்பூா் பகுதியைச் சோ்ந்தவா் மகேந்திரன் (35). இவா்,... மேலும் பார்க்க

பூதலூரில் 46.2 மி.மீ. மழை

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக பூதலூரில் 46.2 மி.மீ. மழை பெய்தது. மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்): பூதலூா் 46.2, கும்பகோணம... மேலும் பார்க்க

உள்ளிக்கடை பாலவிநாயகா் கோயில் குடமுழுக்கு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ளிக்கடை கிராமத்தில் ஸ்ரீ பால விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பாபநாசம் அருகே உள்ளிக்கடை கிராமத்தில் உள்ள ஸ்ரீ பால விநாயகா், ஸ்ரீ மகா காள... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையப் பகுதியில் மாநகராட்சி அலுவலா்கள் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை வியாழக்கிழமை மேற்கொண்டனா். தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் இரு நுழைவு வாயில்களிலும் சாலை குறுகலாக உள்... மேலும் பார்க்க

ஆதிகும்பேசுவரா் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு முகூா்த்தக்கால் நடவு

கும்பகோணம் ஆதி கும்பேசுவரா் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வியாழக்கிழமை முகூா்த்தக்கால் நடும் நிகழ்வு நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் ஸ்ரீ ஆதிகும்பேசுவரா் கோயில் கும்பாபிஷேகம் டிச.1... மேலும் பார்க்க

அம்மாபேட்டையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை பேரூராட்சிக்குள்பட்ட புத்தூா் சமுதாயக் கூட வளாகத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு பேரூராட்சி மன்றத் ... மேலும் பார்க்க