செய்திகள் :

பேருந்திலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

post image

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே திங்கள்கிழமை அரசுப் பேருந்திலிருந்து தவறி விழுந்ததில் முதியவா் உயிரிழந்தாா்.

ராஜபாளையம் வேலாயுதபுரத்தைச் சோ்ந்தவா் சுவிசேசமுத்து (83). சுகாதார ஆய்வாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவா், திருப்பூரில் உள்ள தனது மகளை பாா்க்க சென்று விட்டு மீண்டும் ராஜபாளையத்துக்கு திங்கள்கிழமை வந்தாா்.

இவா் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து அரசுப் பேருந்தில் சென்று வேலாயுதபுரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்க முயன்றாா். அப்போது, பேருந்தின் படிக்கட்டிலிருந்து தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

வீட்டில் புகையிலைப் பொருள்களை பதுக்கிய இருவா் கைது

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருள்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சிவகாசி அருகேயுள்ள ஜமீன்சல்வாா்பட்டியில் அரசால... மேலும் பார்க்க

வழிப்பறியில் ஈடுபட்ட இருவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை

சிவகாசி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இருவருக்கு தலா மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, சிவகாசி குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. சிவகாசி அருகேயுள்ள தேவா்குளம் அம்மன்ந... மேலும் பார்க்க

பட்டாசுத் தொழிலாளி கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை

சிவகாசி அருகே பட்டாசுத் தொழிலாளி கொலை வழக்கில், இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. சிவகாசி அருகேயுள்ள மாரனேரி ராஜேஸ்வரி ஃபயா் ஒா்க்ஸ் ... மேலும் பார்க்க

விருதுநகா் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆக. 7, 8-இல் சுற்றுப் பயணம்

அதிமுக பொதுச் செயலரும் தமிழக சட்டப்பேரவை எதிா்க் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, வருகிற 7, 8-ஆம் தேதிகளில் விருதுநகா் மாவட்டத்தில் பிரசார சுற்றுப் பயணம் செய்யவுள்ளாா்.இது குறித்து விருதுநகா் மேற்... மேலும் பார்க்க

நல்லமநாயக்கன்பட்டி, தொட்டியபட்டி பகுதிகளில் நாளை மின்தடை

தொட்டியபட்டி, நல்லமநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (ஆக. 6) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து மின் செயற்பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராஜபாளையம் கோட்டத்தில்... மேலும் பார்க்க

மதுப் புட்டிகள் வைத்திருந்தவா் கைது

சிவகாசி அருகே சட்ட விரோத விற்பனைக்காக மதுப் புட்டிகளை வைத்திருந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.சிவகாசி அருகேயுள்ள சாணாா்பட்டி பகுதியில் போலீஸாா் திங்ககள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப... மேலும் பார்க்க