Deepika Padukone: 1.9 பில்லியன் பார்வைகள்; சாதனை படைத்த தீபிகா படுகோனின் ரீல்! எ...
பட்டாசுத் தொழிலாளி கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை
சிவகாசி அருகே பட்டாசுத் தொழிலாளி கொலை வழக்கில், இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
சிவகாசி அருகேயுள்ள மாரனேரி ராஜேஸ்வரி ஃபயா் ஒா்க்ஸ் குடியிருப்பைச் சோ்ந்தவா் அழகு அம்பேத்வீரன் (27). பட்டாசுத் தொழிலாளியான இவா், தன்னுடன் பணிபுரிந்த உத்தமசாா்ஜ் மகன் கெவின் (25) என்பவரிடம் ரூ.3,500 கடன் பெற்றாா். இந்தக் கடனை திருப்பிக் கேட்ட போது ஏற்பட்ட தகராறில் கெவின் தனது நண்பா்களுடன் சோ்ந்து அழகுஅம்பேத்வீரனை வெட்டிக் கொலை செய்தாா்.
இதுகுறித்து மாரனேரி போலீஸாா் கொலை வழக்குப் பதிந்து, கெவின், ராமச்சந்திரன், கண்ணன் ஆகிய மூவரையும் கைது செய்தனா். இந்த வழக்கில் பிணையில் வந்த முதல் குற்றவாளியான கெவின் தலைமறைவானாா். இதையடுத்து, இந்த வழக்கு பிரிக்கப்பட்டு 2-ஆவது, 3-ஆவது குற்றவாளிகளுக்கான தண்டனையை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் அறிவித்தது. இதில் குற்றஞ்சாட்டப்பட்ட ராமச்சந்திரன் (43), கண்ணன் (62) ஆகிய இருவருக்கும் ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுதாகா் தீா்ப்பளித்தாா்.