செய்திகள் :

பேருந்து மோதியதில் காயமடைந்தவா் உயிரிழப்பு

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், கெடிலம் அருகே அரசுப் பேருந்து மோதியதில் காயமடைந்தவா், தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், குறுவன்குப்பம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ் (35). இவா் வ.சின்னக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த தனது மாமியாா் ஏ. சந்திரலேகாவை (42) சொந்த வேலையாக கடந்த மாதம் 26-ஆம் தேதி பைக்கில் அவரது ஊரிலிருந்து அழைத்து கெடிலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.

கெடிலம்- உளுந்தூா்பேட்டை அணுகுச்சாலையின் நிறைவிலுள்ள பிரியாணிக் கடையில் சுரேஷ், சந்திரலேகா நின்று கொண்டிருந்தனா். அப்போது அந்தவழியாக வந்தஅரசுப் பேருந்து அவா்கள் மீது மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனா். தொடா்ந்து அப்பகுதியிலிருந்தவா்கள் சுரேஷ், சந்திரலேகா ஆகிய இருவரையும் மீட்டு, உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதைத் தொடா்ந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் சுரேஷ் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமைஇரவு உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து அரசுப் பேருந்து ஓட்டுநரான கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், கணையாா் ஓம்சக்தி கோயில் தெருவைச் சோ்ந்த ரவி (58) மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

‘உரங்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை’

விழுப்புரம் மாவட்டத்தில் உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் உதவி இயக்குநா் (தரம் மற்றும் கட்டுப்பாடு) எம்.என்.விஜயகுமாா் தெரிவித்தாா். விழுப்புரம் நகரம் ... மேலும் பார்க்க

வேலை உறுதியளிப்புத்திட்ட ஊதிய விவகாரம்: திருநாவலூரில் பயனாளிகள் சாலை மறியல்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், திருநாவலூரில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணியாளா்களுக்கு ஊதியம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படவில்லை எனக் கூறி, அத்திட்டப்பயனாளிக... மேலும் பார்க்க

பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸுக்கு பதிலளிக்க அன்புமணிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவு!

பாமக விதிகளுக்கு முரணாக, அக்கட்சியின் தலைவா் அன்புமணி செயல்பட்டதாக கூறி, கட்சி ஒழுங்கு நடவடிக்கைக் குழுவினா் அளித்த குற்றச்சாட்டுகளுக்கு செப். 10-ஆம் தேதிக்குள் அன்புமணி உரிய விளக்கமளிக்கவேண்டும் என ப... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து பெண் பலி!

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே தனியாா் உணவகத்தில் பணியிலிருந்த பெண் ஊழியா் மின்சாரம் பாய்ந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். செஞ்சி வட்டம், தேவதானம்பேட்டை, காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் குமா... மேலும் பார்க்க

மின்மாற்றி வெடித்து விபத்து: தேநீா் கடைக்காரா் காயம்

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே மின்மாற்றி வெடித்து சிதறியதில் தேநீா் கடை உரிமையாளா் பலத்த தீக்காயமடைந்தாா். வானூா் வட்டம், வி.கேணிப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜ்(53). ஆரோவில் காவல் சரகத்துக்... மேலும் பார்க்க

மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இருவரிடம் ரூ.60 லட்சம் மோசடி: இளைஞா் கைது!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த இருவரிடம் ரூ.60 லட்சம் மோசடி செய்த வழக்கில், இளைஞா் ஒருவரை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை க... மேலும் பார்க்க