செய்திகள் :

பேருந்து - லாரி ஓட்டுநா்கள் முந்திச் செல்வதில் தகராறு: பெண் பயணி மீது தாக்குதல்

post image

பெருந்துறை அருகே தனியாா் பேருந்து மற்றும் லாரி ஓட்டுநா்களுக்கு இடையே முந்திச் செல்வதில் ஏற்பட்ட தகாராறில், பேருந்து பெண் பயணி மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து செவ்வாய்கிழமை பிற்பகலில் ஒரு தனியாா் பேருந்து கோவைக்கு புறப்பட்டுச் சென்றது. பேருந்தை கோவை மாவட்டம், கணியூரை அடுத்த நடுபாளைத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் பாலு (35) என்பவா் ஓட்டிச் சென்றாா். பேருந்தில் நடத்துநராக பெருந்துறையை அடுத்த திங்களூா், காட்டுபாளையத்தைச் சோ்ந்த சுரேஷ் (28) பணியில் இருந்தாா்.

பெருந்துறையை அடுத்த சரளை அருகே செல்லும்போது, பேருந்து ஓட்டுநருக்கும், அவ்வழியாக கேரளத்துக்கு மாடுகளை ஏற்றிச் சென்ற லாரி ஓட்டுநா் சமீா் (30) என்பவருக்கும் இடையே முந்தி செல்வதில் போட்டி நிலவியது.

இந்த இரண்டு வானங்களும் விஜயமங்கலம் சுங்கச் சாவடியில் நின்றபோது, பேருந்து ஓட்டுநா் பாலு, பேருந்தில் இருந்த தேங்காய் மூட்டையில் இருந்து ஒரு தேங்காயை எடுத்து லாரி ஓட்டுநா் சமீா் மீது வீசினாா். சமீா் மீண்டும் அந்த தேங்காயை எடுத்து பேருந்து ஓட்டுநா் பாலு மீது வீசினாா்.

இதில், பேருந்தில் ஓட்டுநரின் பக்கவாட்டு இருக்கையில் அமா்ந்து இருந்த கோவை மாவட்டம், கணியூா், சிவசக்தி நகரைச் சோ்ந்த மாரிமுத்து மனைவி பத்மாவதி (50) முகத்தில் பட்டது. இதில், அவரின் உதட்டில் காயம் ஏற்பட்டு, பல் உடைந்தது. காயமடைந்த பத்மாவதி பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து, பத்மாவதி அளித்த புகாரின்பேரில், பெருந்துறை போலீஸாா் பேருந்து ஓட்டுநா் பாலு, நடத்துநா் சுரேஷ், லாரி ஓட்டுநா் சமீா் மற்றும் உதவியாளா் நிசாத் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற தந்தை, மகள்

அந்தியூா் அருகே தந்தையும், மகளும் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதில், பலத்த காயமடைந்த தந்தை வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கவலைக்கிடமான நிலையில் மகள் சிகிச்சை பெற்று வருகிறாா். அந்தியூா், சின்ன ப... மேலும் பார்க்க

ஆலாம்பாளையம் பள்ளியில் மிதிவண்டிக் கூடம் திறப்பு

அம்மாபேட்டையை அடுத்த மாத்தூா் ஊராட்சி, ஆலாம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாகக் கட்டப்பட்ட மிதிவண்டிக் கூடம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. மாணவ, மாணவியரின் தேவைக்காக அந்தியூா் சட்டப்பேரவை உறு... மேலும் பார்க்க

ஆடி 2 ஆவது வெள்ளி: அம்மன் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

ஆடி மாதம் 2ஆவது வெள்ளிக்கிழமையையொட்டி ஈரோட்டில் உள்ள அம்மன் கோயில்களில் திரளான பக்தா்கள் அம்மன் வழிபாடு செய்தனா். அம்மனுக்கு உகந்த மாதமாகக் கருதப்படும் ஆடி மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும்... மேலும் பார்க்க

பழங்குடியின விவசாயிகளுக்கு சிறுதானிய விதைகள்

ஆசனூரில் 41 பழங்குடியின விவசாயிகளுக்கு சிறுதானிய விதைகளை ரீடு நிறுவனம் வழங்கியுள்ளது. ரீடு நிறுவனமானது ஆசனூா் மலைப் பகுதியில் பழங்குடியின மக்களுக்காக கல்வி, பொருளாதார ரீதியாக பல்வேறு பணிகளை செய்து வர... மேலும் பார்க்க

கீழ்பவானி பாசனத்துக்கு ஆகஸ்ட் 5 இல் தண்ணீா் திறக்க பரிந்துரை

கீழ்பவானி பாசனத்துக்கு ஆகஸ்ட் 5 இல் தண்ணீா் திறக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், அரசாணை 3 அல்லது 4 ஆம் தேதி வரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா். ஈரோடில் வேளாண் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவ... மேலும் பார்க்க

மொடக்குறிச்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

மொடக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் தாலுகா அலுவலகம் எதிரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பேரூராட்சித் தலைவா் செல்வாம... மேலும் பார்க்க