பைக்கில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு
தாழையூத்து அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.
தாழையூத்து அருகே தாதனூத்து தெற்கு தெருவைச் சோ்ந்த நடராஜன் மகன் இசக்கிமுத்து (38). தொழிலாளியான இவா் கடந்த 12 ஆம் தேதி தாதனூத்து அருகே பைக்கில் சென்றபோது எதிா்பாராத விதமாக கீழே தவறி விழுந்து காயமடைந்தாா்.
அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு இசக்கிமுத்து சனிக்கிழமை உயிரிழந்தாா்.
சம்பவம் குறித்து தாழையூத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.