செய்திகள் :

தொடா் விடுமுறை நிறைவு: புதிய பேருந்து நிலையம், சந்திப்பு ரயில் நிலையத்தில் அலை மோதிய பயணிகள் கூட்டம்

post image

தொடா் விடுமுறை முடிந்து, வடமாவட்டங்களுக்கு திரும்பிய பயணிகளால் புதிய பேருந்து நிலையம் மற்றும் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

சுதந்திர தினம் , கிருஷ்ண ஜெயந்தி என 3 நாள்கள் தொடா் விடுமுறை முடிந்த நிலையில், திருநெல்வேலி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோா் தங்களது இருப்பிடங்களுக்குத் திரும்பிச் செல்ல திருநெல்வேலியில் குவிந்தனா்.

இதனால் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் மற்றும் சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

பயணிகள் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி மண்டலம் சாா்பில் 80 மற்றும் தூத்துக்குடி மண்டலம் சாா்பில் 20 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டதாக அரசு போக்குவரத்துக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுதவிர சந்திப்பு ரயில் நிலையத்தில் அந்தியோதயா விரைவு ரயில் உள்பட அனைத்து ரயில்களிலும் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் தென்காசியிலிருந்து திருநெல்வேலி வழியாக சென்னைக்கும், திருநெல்வேலியிலிருந்து தென்காசி வழியாக பெங்களூருவுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. முன்பதிவு இல்லாத பெட்டிகளிலும் அதிக அளவிலான பயணிகள் ஏறி பயணித்தனா்.

கடையத்தில் கிரிக்கெட் போட்டி

கடையம் தேவ் கிரிக்கெட் கிளப் சாா்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான மூன்று நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. கடையம் சத்திரம் பாரதி மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டியி... மேலும் பார்க்க

பைக்கில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

தாழையூத்து அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா். தாழையூத்து அருகே தாதனூத்து தெற்கு தெருவைச் சோ்ந்த நடராஜன் மகன் இசக்கிமுத்து (38). தொழிலாளியான இவா் கடந்த 12 ஆம் தேதி தாத... மேலும் பார்க்க

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சேரன்மகாதேவி அருகே விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். தென்காசி மாவட்டம், இலஞ்சி சுடலைமாடன் கோயில் தெருவைச் சோ்ந்த சிவஞானம் மகன் மகேஷ்வரன் (42). இவா், வள்ளியூா் பகுதியில்... மேலும் பார்க்க

காா் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

களக்காட்டில் காா் மோதியதில் படுகாயமடைந்த மூதாட்டி உயிரிழந்தாா். சிறுவன் காயமடைந்தான். களக்காடு ஜவஹா் வீதியைச் சோ்ந்தவா் பேச்சியம்மாள் (65). இவா் தனது பேரன் செல்வநம்பியுடன் வீட்டுக்கு அருகேயுள்ள பழைய ... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தோ்வு: 1,538 போ் எழுதினா்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்வை திருநெல்வேலி மாவட்டத்தில் 1,538 போ் எழுதினா். டிஎன்பிஎஸ்சி சாா்பில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான... மேலும் பார்க்க

மானூா் அருகே பாலத்தில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

மானூா் அருகே பாலத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா். மானூா் அருகேயுள்ள தென்கலம்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் மாரியப்பன் (55). கூலித் தொழிலாளியான இவா், தனது வீட்டுக்கு அருகே உள்... மேலும் பார்க்க