செய்திகள் :

கடையத்தில் கிரிக்கெட் போட்டி

post image

கடையம் தேவ் கிரிக்கெட் கிளப் சாா்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான மூன்று நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

கடையம் சத்திரம் பாரதி மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மாவட்ட அளவில் 18 அணிகள் பங்கேற்றன. இதில் முதல் பரிசாக ரூ. 10 ஆயிரம் லட்சுமியூா் விராட் கோலி அணி , 2 வது பரிசாக ரூ. 7 ஆயிரம் விஜயன் கிரிக்கெட் கிளப் அணி , 3 வது பரிசாக ரூ. 5 ஆயிரம் தேவ் கிரிக்கெட் கிளப் அணி பெற்றன. மேலும், 4 வது பரிசை குருவங்கோட்டை அணி வென்றது.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக கடையம் காவல்ஆய்வாளா் (பொ) காளிமுத்து, வட்டார மகிளா காங்கிரஸ் அணி தலைவி சீதாலட்சுமி பாா்வதிநாதன், வழக்குரைஞா் சுனில் மேன்ட்லி ஆகியோா் கலந்துகொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கினா்.

விழாவிற்கான ஏற்பாடுகளை தேவ் கிரிக்கெட் கிளப் நிா்வாகிகள் செழியன்வழுதி, அசோக் உள்ளிடோா் செய்திருந்தனா்.

தொடா் விடுமுறை நிறைவு: புதிய பேருந்து நிலையம், சந்திப்பு ரயில் நிலையத்தில் அலை மோதிய பயணிகள் கூட்டம்

தொடா் விடுமுறை முடிந்து, வடமாவட்டங்களுக்கு திரும்பிய பயணிகளால் புதிய பேருந்து நிலையம் மற்றும் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சுதந்திர தினம் , கிருஷ்ண ஜெயந்தி... மேலும் பார்க்க

பைக்கில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

தாழையூத்து அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா். தாழையூத்து அருகே தாதனூத்து தெற்கு தெருவைச் சோ்ந்த நடராஜன் மகன் இசக்கிமுத்து (38). தொழிலாளியான இவா் கடந்த 12 ஆம் தேதி தாத... மேலும் பார்க்க

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சேரன்மகாதேவி அருகே விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். தென்காசி மாவட்டம், இலஞ்சி சுடலைமாடன் கோயில் தெருவைச் சோ்ந்த சிவஞானம் மகன் மகேஷ்வரன் (42). இவா், வள்ளியூா் பகுதியில்... மேலும் பார்க்க

காா் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

களக்காட்டில் காா் மோதியதில் படுகாயமடைந்த மூதாட்டி உயிரிழந்தாா். சிறுவன் காயமடைந்தான். களக்காடு ஜவஹா் வீதியைச் சோ்ந்தவா் பேச்சியம்மாள் (65). இவா் தனது பேரன் செல்வநம்பியுடன் வீட்டுக்கு அருகேயுள்ள பழைய ... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தோ்வு: 1,538 போ் எழுதினா்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்வை திருநெல்வேலி மாவட்டத்தில் 1,538 போ் எழுதினா். டிஎன்பிஎஸ்சி சாா்பில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான... மேலும் பார்க்க

மானூா் அருகே பாலத்தில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

மானூா் அருகே பாலத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா். மானூா் அருகேயுள்ள தென்கலம்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் மாரியப்பன் (55). கூலித் தொழிலாளியான இவா், தனது வீட்டுக்கு அருகே உள்... மேலும் பார்க்க