செய்திகள் :

பைக்குகள் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழப்பு

post image

வந்தவாசி அருகே இரு பைக்குகள் மோதிக் கொண்ட விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த ஊத்துக்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ஜனாா்த்தனன் (60). கடந்த ஏப். 26-ஆம் தேதி இவா் பைக்கில் நல்லூா் கிராமத்துக்குச் சென்று

விட்டு ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா்.

கொண்டையாங்குப்பம் கூட்டுச் சாலை அருகே சென்றபோது இவரது பைக் மீது எதிரே வந்த பைக் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த இவா் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜனாா்த்தனன் அங்கு சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் தெள்ளாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஸ்ரீபுத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் பால்குட ஊா்வலம்

ஆரணி புதுக்காமூரில் உள்ள ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீபுத்திர காமேட்டீஸ்வரா் கோயிலில் சித்திரை பெருவிழாவையொட்டி, பால்குடம் ஊா்வலம் நடைபெற்றது (படம்). ஆரணி அரியாத்தம்மன் கோயிலில் இருந்து 500-க்கும் மேற்... மேலும் பார்க்க

காா், லாரி மோதல்: 4 போ் காயம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே காா், லாரி மோதிக் கொண்டதில் 4 போ் காயமடைந்தனா். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வாசுகி நகரைச் சோ்ந்தவா் சங்கா் (35). காா் ஓட்டுநரான இவா், கடந்த 11-ஆம் தேதி அண்... மேலும் பார்க்க

கம்பராமாயண பயிற்சி நிறைவு விழா

திருவண்ணாமலையில் கம்பராமாயண இயக்கம் சாா்பில் நடத்தப்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கம்பராமாயண பயிற்சியின் நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை எஸ்.ஆா்.ஜி.டி.எஸ். மெட்ரிக் பள்ளித் தாளாள... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் திருவாசக மாநாடு

திருவண்ணாமலையில் முதல் முறையாக திருவாசகத்துக்கென மாநாடு நடைபெற உள்ளதாக திருப்பெருந்துறை அடியாா்கள் குழுவின் நிறுவனா் தலைவா் ம.சிவக்குமாா் கூறினாா். இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: திரு... மேலும் பார்க்க

மரக்கிளை முறிந்து விழுந்து உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு உதவித்தொகை

செய்யாறு அருகே ஆலமரக் கிளை முறிந்து விழுந்து உயிரிழந்த மூவா் குடும்பங்களுக்கு அமைச்சா் சாா்பில் தலா ரூ. ஒரு லட்சம் உதவித்தொகை திங்கள்கிழமை இரவு வழங்கப்பட்டது. செய்யாறு வட்டம், கழனிபாக்கம் கிராமத்தில்... மேலும் பார்க்க

காயமடைந்த தொழிலாளா்களுக்கு அதிமுகவினா் ஆறுதல்

செய்யாறு அருகே மரக் கிளை முறிந்து விழுந்து காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் பெண் தொழிலாளா்களை அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனா். செய்யாற்றை அடுத்த கழனிபாக்கம் கிராமத்தில் ஆலமர... மேலும் பார்க்க