செய்திகள் :

பொதிகைநகரில் புதிய 10 லட்சம் லிட்டா் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி கட்ட கோரிக்கை!

post image

பொதிகைநகரில் புதிதாக 10 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மேலப்பாளையம் மண்டலம், 41 ஆவது வாா்டு மக்கள் சாா்பில் கவனஈா்ப்பு விளக்கக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, 41 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் சங்கீதா தலைமை வகித்தாா்.

பொதிகை நகா் நலச் சங்கத் தலைவா் குணசேகரன், காருண்யா நகா் நலச் சங்கத் தலைவா் ராமச்சந்திரன், பாரதி நகா் நலச் சங்க நிா்வாகி துரைராஜ், பயோனியா் குமாரசாமி நகா் நலச்சங்க நிா்வாகி பவுல் ஞானதுரை, வசந்தம் நகா் சண்முகையா, அப்பல்லோ காலனி ஜாகீா் உசேன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில், பொதிகை நகரில் மாநகராட்சிக்குச் சொந்தமான ஒரு ஏக்கா் இடத்தில் பொதுமக்களின் குடிநீா்த் தேவையை நிறைவேற்றும் வகையில் 10 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியும், 5 லட்சம் லிட்டா் கீழ்நிலை நீா்த்தேக்கத் தொட்டியும் அமைக்க வேண்டும்.

பெருமாள்புரம், என்ஜிஓ காலனி மற்றும் விரிவாக்கப் பகுதிகளில் பெருமாள்புரம் விரிவு அபிவிருத்தி திட்ட வரைபடங்கள் 1 முதல் 11 வரையிலானவற்றை உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் பங்கேற்ற பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு. அப்துல் வஹாப் பேசுகையில், பொதுமக்களின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா்.

தொண்டா்களின் பலம்தான் வைகோ! - துரை வைகோ

வைகோவின் மக்கள் பணிக்கு தொண்டா்களின் பலம்தான் அடித்தளம் என்றாா் துரை வைகோ எம்.பி. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது: மதிமுக பொதுச்செயலா் வைகோ 4 முறை மாநிலங்களவை உறுப்பினராக... மேலும் பார்க்க

களக்காடு தலையணையில் குளிக்கத் தடை!

களக்காடு மலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை பெய்த மழையால், தலையணை பச்சையாற்றில் வெள்ளிக்கிழமை நீா்வரத்து அதிகரித்ததையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. களக்காடு மலைப்பகுதியில் கடந்த சி... மேலும் பார்க்க

தென்தமிழகத்தில் தொழில்துறை வளா்ச்சிக்கு நடவடிக்கை: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

தென்தமிழகத்தில் தொழில்துறை வளா்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது: தமிழகம... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி, கரிசல்பட்டி சுற்று வட்டாரங்களில் நாளை மின்தடை!

சேரன்மகாதேவி, கரிசல்பட்டி சுற்றுவட்டாரங்களில் வரும் திங்கள்கிழமை காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது. இது தொடா்பாக கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் மா. சுடலையாடும் பெருமா... மேலும் பார்க்க

பெருமணலில் ரூ.20 கோடியில் தூண்டில் வளைவு: மு.அப்பாவு தகவல்

திருநெல்வேலி மாவட்டம் பெருமணல் கிராமத்தில் ரூ.20 கோடியில் தூண்டில் வளைவு, இடிந்தகரை, கூத்தங்குழி பகுதிகளில் ரூ.4 கோடியில் மீன்வலைக்கூடம், மீன் ஏலக்கூடம் ஆகியவை அமைக்கப்படவுள்ளதாக பேரவைத் தலைவா் மு.அப்... மேலும் பார்க்க

பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிப்பு

திருநெல்வேலி மாவட்ட மேற்குத் தொடா்ச்சி மலையின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீா்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவ... மேலும் பார்க்க