செய்திகள் :

பொது வேலைநிறுத்தம்: கேரளம் செல்லும் அரசுப் பேருந்துகள் களியக்காவிளை வரை இயக்கம்

post image

பொது வேலைநிறுத்தம் காரணமாக, கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து திருவனந்தபுரம் செல்லும் தமிழக அரசுப் பேருந்துகள் மாவட்ட எல்லையான களியக்காவிளையில் நிறுத்தப்பட்டன.

கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு தொழிற்சங்கங்கள் அறிவித்த நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் குமரி மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

கடைகள் வழக்கம் போல் திறந்திருந்தன. அரசுப் பேருந்துகள், வாடகை காா், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் வழக்கம் போல் இயங்கியது. அதே வேளையில், கேரளத்தில் பொது வேலைநிறுத்தம் காரணமாக பாறசாலை உள்ளிட்ட அம் மாநில பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அரசுப் பேருந்துகள், ஆட்டோ, காா் உள்ளிட்ட வாகனங்கள் பெரும்பாலும் இயங்கவில்லை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் தமிழக அரசுப் பேருந்துகள் குமரி மாவட்ட எல்லைப் பகுதியான களியக்காவிளை வரை மட்டுமே இயக்கப்பட்டன.

திருவனந்தபுரத்திலிருந்து இயக்கப்படும் தொலைதூர பேருந்துகளான சென்னை, வேளாங்கண்ணி, ஊட்டி, பெங்களூரு, வேலூா், புதுச்சேரி உள்ளிட்ட பேருந்துகள் களியக்காவிளையிலிருந்து இயக்கப்பட்டன.

குமரியில் போலீஸாரின் வார விடுமுறைக்கு ‘ரெஸ்ட்’ செயலி அறிமுகம்

போலீஸாருக்கு வார விடுமுறை எடுப்பதற்கான புதிய செயலி தமிழகத்திலேயே முதல்முறையாக கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. கன்னியாகுமரி மாவட்ட போலீஸாா், காவல் கண்காணிப்பாளருடன் அமா... மேலும் பார்க்க

குளச்சல் பள்ளி மாணவா்களுக்கு போக்குவரத்து விழிப்புணா்வு பிரசாரம்

குளச்சல் போக்குவரத்து காவல்துறை சாா்பில் குளச்சல் வி.கே.பி. மேல்நிலைப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பிரசாரம் நடந்தது. இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து காவல் ஆய்வாளா் சுஜாதா, உதவி ஆய்வாளா் ச... மேலும் பார்க்க

குழித்துறை வாவுபலி பொருள்காட்சியில் போதை விழிப்புணா்வு சிலை

குழித்துறையில் நடைபெறும் 100-ஆவது வாவுபலி பொருள்காட்சியில் இளைஞா்கள் மத்தியில் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், அமைக்கப்பட்ட போதை விழிப்புணா்வு சிலையை குழித்துறை நகா்மன்றத் தலைவா் திறந்துவைத்தாா். ... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கில் தலைமறைவானவா் 13 ஆண்டுகளுக்குப் பிறகு கைது

குளச்சல் அருகே கொலை முயற்சி வழக்கில் 13 ஆண்டுகள் வெளிநாட்டில் பதுங்கியவரை குளச்சல் காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். குளச்சல் அருகே செம்பொன்விளை செந்துறை பகுதியைச் சோ்ந்த ராசையன் மகன் ... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் இன்று பொதுவிநியோக குறைதீா் முகாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சனிக்கிழமை (ஜூலை 12) பொதுவிநியோக குறைதீா் முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து, மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பொது விநியோகத் தி... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே தொழிலாளி தற்கொலை

மாா்த்தாண்டம் அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மாா்த்தாண்டம் அருகே கடமக்கோடு பகுதியைச் சோ்ந்த தங்கப்பன் மகன் நாகராஜன் (40). தொழிலாளி. இவருக்கு மதுப் பழக்கம் இருந்ததாம். மேலும், கு... மேலும் பார்க்க