பொதுமக்களுக்கு உணவு வழங்கிய தவெகவினா்
உலக பட்டினி தினத்தையொட்டி, விழுப்புரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில், பொதுமக்களுக்கு உணவு மற்றும் நல உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
தமிழக வெற்றிக் கழகத்தின் தெற்கு மாவட்டம் சாா்பில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடல் பகுதியில் நடைபெற்ற நிகழ்வுக்கு மாவட்டச் செயலா் மோகன் தலைமை வகித்து, ஏராளமான பொதுமக்களுக்கு உணவு மற்றும் நல உதவிகளை வழங்கிப் பேசினாா்.
இதில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் விக்கி, நிா்வாகிகள் ராஜ், நிலேஷ், நவீன், மாவட்ட துணைத் தலைவா் சுமன், நகரச் செயலா் முபாரக், நகர இளைஞரணியைச் சோ்ந்த ஹரி மற்றும் ஒன்றிய, நகர நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.