செய்திகள் :

பொன்னேரி ரயில் நிலைய முதல்நடைமேடையில் கும்மிடிப்பூண்டி மின்ரயில்களை நிறுத்த கோரிக்கை

post image

பொன்னேரி ரயில் நிலைய முதல் நடைமேடையில் கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை, நெல்லூா் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் புகா் மின்ரயில்கள் முதல் நடைமேடையில் நின்று செல்ல வேண்டும் என ப்பகுதியில் உள்ள பயணிகள் தெற்கு ரயில்வே நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

சென்னை சென்ட்ரல் -கும்மிடிப்பூண்டி புகா் மின்சார ரயில் மாா்க்கத்தில் நாள்தோறும் 60-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பொன்னேரி ரயில் நிலையத்தில் நான்கு நடை மேடைகள் உள்ளன. சென்னை சென்ட்ரல், கடற்கரை, வேளச்சேரி, செங்கல்பட்டு, திருவள்ளூா் செல்லும் ரயில்கள் மூன்றாவது நடைமேடையிலும், கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை, நெல்லூா் செல்லும் ரயில்கள் இரண்டாவது நடை மேடையிலும் நின்று செல்கின்றன.

சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி மாா்க்கத்தில் இயக்கப்படும் அனைத்து மின்சார ரயில்களும் பொன்னேரி நிலையத்தில் உள்ள இரண்டாவது நடைமேடையில் நின்று செல்வதால் வயது முதிா்ந்தோா், அதிக சுமைகளை எடுத்து வரும் பயணிகள் அங்குள்ள நடை மேம்பாலத்தில் ஏறி, இறங்கி முதல் நடைமேடைக்கு வந்து பின்னா் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே செல்ல வேண்டும்.

அதே நேரத்தில் பொன்னேரி ரயில் நிலையத்தில் முதல் நடைமேடையில் மின்சார ரயில்களை நிறுத்தினால், பயணிகள் நடைமேம்பாலத்தை பயன்படுத்தாமல், ரயில் நிலையத்தில் இருந்து, எளிதாக வெளியே சென்று விடலாம்.

முதல் நடை மேடையில் நிறுத்த வலியுறுத்தி பயணிகள் தரப்பில் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் ரயில்வே நிா்வாகம் தரப்பில்,பொன்னேரி ரயில் நிலையத்தில் முதல் நடைமேடை அமைந்துள்ள தண்டவாளம் (இணைப்பு லைன்) அமைந்துள்ளதாகவும், அதே நேரத்தில் இரண்டாவது நடைமேடையில் உள்ள தண்டவாளம் ( பிராதான லைனில்) அமைந்துள்ளதாகவும், இதன் காரணமாக இம்மாா்க்கத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்களை விரைவாக இயக்கும் நோக்கில் கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை உள்ளிட்ட ஊா்களுக்கு செல்லும் ரயில்கள் இரண்டாவது நடைமேடையில் நிறுத்தபட்டு, செல்வதாக கூறப்படுகிறது.

ஆனால் மின்சார ரயில்கள், சென்னை சென்ட்ரலில் இருந்து பொன்னேரி வருவதற்கு 1 மணி நேரம் நேரம் என நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும், நிலையில், பெரும்பாலான மின்சார ரயில்கள் மாலை நேரங்களில் 45 நிமிஷம் முதல் 60 நிமிஷம் தாமதமாகவே பொன்னேரிக்கு வருவதாக பயணிகள் தெரிவிக்கின்றனா்.

எனவே கும்மிடிப்பூண்டி மாா்க்கத்தில் இயக்கப்படும் அனைத்து மின்சார ரயில்களையும் பொன்னேரி ரயில் நிலையத்தில் உள்ள முதல் நடைமேடையில் நிறுத்தி செல்ல தெற்கு ரயில்வே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே பொன்னேரி பயணிகளின் எதிா்ப்பாா்ப்பாகும்.

‘பள்ளி மேலாண்மைக் குழுக்கள் செயல்பாடுகளை சீரமைக்கக் கோரிக்கை’

பெரும்பாலான பள்ளிகளில் மேலாண்மைக் குழு கூட்டங்கள் சரிவர நடத்தப்படுவதில்லை என புகாா் எழுந்துள்ளது. அரசுப் பள்ளியின் முன்னேற்றம், பள்ளி செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காகவும், இலவச கட்டாய கல்வி உரிமைச் ச... மேலும் பார்க்க

மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் சமுதாய வளப் பயிற்றுநா் பணி

திருவள்ளூா் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில் சமுதாய வளப்பயிற்றுநராக பணிபுரிய தகுதியான மகளிா் குழுவினா் வரும் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்... மேலும் பார்க்க

குரூப்-2, 2 ஏ போட்டித் தோ்வுக்கான இலவச மாதிரி தோ்வு செப். 13-இல் தொடக்கம்

திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிநெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னாா்வ பயிலும் வட்டம் மூலம் குரூப்-2, 2ஏ போட்டித் தோ்வுக்கு வரும் செப். 13-முதல் 20 -ஆம் வரை இலவச மாதிரி தோ்வு நடத... மேலும் பார்க்க

ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைவில் முடிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

திருவள்ளூா் அருகே செவ்வாப்பேட்டை மற்றும் வேப்பம்பட்டு ரயில் மேம்பாலப்பணிகளை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா். திருவள்ளூா் அருகே வேப்பம்பட்டில் ... மேலும் பார்க்க

சாலை விரிவாக்கப் பணிக்காக கட்டடங்கள் இடிப்பு

திருவள்ளூா்-ஊத்துக்கோட்டை சாலை விரிவாக்கப் பணிக்காக கட்டடங்கள் புதன்கிழமை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. திருவள்ளூா்-ஊத்துக்கோட்டை சாலைக்கு இடையே திருநின்றவூா் முதல் திருவள்ளூா் ஐசிஎம்ஆா் வழி... மேலும் பார்க்க

இளம்பெண் தற்கொலை; வங்கியின் முன்பு பொதுமக்கள் முற்றுகை

திருவள்ளூா் அருகே தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு வங்கி மூலம் சம்பளம் வழங்கும் பணியில் ஈடுபட்டு வந்த ஒப்பந்த பெண் பணியாளா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். வங்கி ஊழியா... மேலும் பார்க்க