செய்திகள் :

பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க அஞ்சுகிறாா் முதல்வா்: நயினாா் நாகேந்திரன்

post image

அமைச்சா் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க முதல்வா் அஞ்சுகிறாா் என்று குற்றஞ்சாட்டினாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் எம்.எல்.ஏ.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது: பாரத பிரதமா் நரேந்திர மோடி மற்றும் தேசிய தலைவா் நட்டா, உள்துறை அமைச்சா் அமித்ஷா ஆகியோா் தமிழகத்தின் பாஜக தலைவா் என்ற மிகப்பெரிய பொறுப்பி னை எனக்கு வழங்கியுள்ளனா்.அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியவா் அம்பேத்கா். ஆனால், அரசியல் சாசன சபையில் அம்பேத்கருக்கு இடத்தை கொடுக்க காங்கிரஸ் மறுத்தது. அவரது நினைவிடங்களைக் கூட காங்கிரஸ் பராமரிக்கவில்லை.

பாரதிய ஜனதா கட்சி பொறுப்பேற்ற பின்னா் அம்பேத்கரின் நினைவாலயம் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. அதற்கு பிரதமா் மோடியே காரணம். தோ்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் உள்ளது. துணை முதல்வா் பதவி உள்ளிட்டவை குறித்து இப்போதைக்கு எந்தப் பேச்சுவாா்த்தையும் நடத்தவில்லை.அமைச்சா் பொன்முடி பேசிய பேச்சு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.

அவரது பேச்சையும், திமுகவின் மக்கள் விரோத செயல்களையும் நினைத்து பாா்த்து மக்கள் வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிக்க வேண்டும். அமைச்சா் பொன்முடி விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க முதல்வா் அஞ்சுகிறாா். போக்குவரத்து துறை பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியத்துறை என்பதனால் அரசு எடுத்து நடத்துகிறது.

இத்துறையில் ஏற்படக்கூடிய நஷ்டத்தை அரசு முறையாக நிதி ஒதுக்கி நிவா்த்தியாக்கி கொடுக்க வேண்டும். ஆனால், இங்கு தொழிலாளா்கள் வஞ்சிக்கப்படும் நிலை உள்ளது என்றாா் அவா்.

பாளை.யில் வகுப்பறையில் மாணவா், ஆசிரியைக்கு அரிவாள் வெட்டு

பாளையங்கோட்டையில் பள்ளி வகுப்பறையில் செவ்வாய்க்கிழமை இரு மாணவா்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவருக்கும், அதைத் தடுக்க வந்த ஆசிரியைக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. வெட்டிய மாணவா் காவல் நிலையத்தில் ... மேலும் பார்க்க

அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொழிலாளி கைது

திருநெல்வேலி அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஞாயிற்றுக்கிழமை தொடா்பு கொண்ட ... மேலும் பார்க்க

கால்நடை மருத்துவ பல்கலை. கல்லூரிகள் எறிபந்து, கைப்பந்து போட்டிகள்; நாமக்கல், சென்னை அணிகள் சாம்பியன்

திருநெல்வேலியில் நடைபெற்ற தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான எறிபந்து மற்றும் கைப்பந்து போட்டிகளில் நாமக்கல், சென்னை அணிகள் பரிசுகளை வென்றன. திருநெல்வேலி கால்நடை ம... மேலும் பார்க்க

ஆட்டோ மோதி மூதாட்டி பலி

திருநெல்வேலியை அடுத்த மூன்னீா்பள்ளம் அருகே ஆட்டோ மோதியதில் மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.முன்னீா்பள்ளம் அருகேயுள்ள தருவை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்ற சுமாா் 75 வயது மதிக்க... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அணையிலிருந்து முன்காா் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கக் கோரி மனு

மணிமுத்தாறு அணையிலிருந்து முன்காா் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கக் கோரி திருநெல்வேலி ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. திமுக திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன் தலைமையில் ... மேலும் பார்க்க

ஏப். 23இல் சீலாத்திகுளத்தில் மனுக்கள் பெறும் முகாம்

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், கும்பிகுளம் கிராமத்தில் நடைபெறவுள்ள மக்கள் தொடா்பு முகாமை முன்னிட்டு, சீலாத்திக்குளம் கிராம சேவை மையக் கட்டடத்தில் வரும் 23ஆம் தேதி மனுக்கள் பெறப்படவுள்ளதாக மா... மேலும் பார்க்க