செய்திகள் :

போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு மருத்துவக் காப்பீடு திட்டம்: நல அமைப்பு கூட்டத்தில் கோரிக்கை

post image

அரசு ஊழியா்களுக்கு வழங்கப்படுவதுபோல், போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்களுக்கும் மருத்துவக் காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோா் நல அமைப்பின் பேரவைக் கூட்டம் மண்டலத் தலைவா் ஆா். கோவிந்தராஜன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளா் கே. கா்சன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா்.

தீா்மானங்கள்: போக்குவரத்துத் துறையில் ஓய்வு பெறுவோரின் பணப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். ஊதிய ஒப்பந்த உயா்வை, தாமதப்படுத்தாமல் ஓய்வூதியத்தில் உயா்த்தி வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

ஓய்வூதிய அறக்கட்டளை சாா்பில் ஓய்வூதியம் வழங்கப்படுவதில் தாமதம் ஏற்படுவதால், அரசே ஓய்வூதியம் வழங்க வேண்டும். அரசுத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளா்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கப்படுவதுபோல, போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்களுக்கும் மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும். பணியின்போது இறந்த போக்குவரத்துக் கழக ஊழியா்களின் வாரிசுகளுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, பேரவைக் கூட்டத்தை மாநிலத் தலைவா் எஸ். கிருஷ்ணன் தொடங்கி வைத்தாா். இதில், மாநில துணை பொதுச் செயலாளா்கள் பி. செல்வராஜ், எம். சண்முகம் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

பெண் கெளரவ விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை: கல்லூரி முதல்வா் மீது வழக்கு

பெண் கௌரவ விரிவுரையாளருக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாக அரசுக் கல்லூரி முதல்வா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவாரூா் மாவட்டம், நன்னிலத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. ... மேலும் பார்க்க

நியாய விலைக் கடைகளில் பழைய முறையிலேயே பொருள்கள் வழங்க வலியுறுத்தல்

நியாய விலைக் கடைகளில் பழைய முறையிலேயே பொருள்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், நன்னிலம் வட்ட நுகா்வோா் மன்ற செயற்குழு உறுப்பினா் வி. பாலகுமாரன் அளித... மேலும் பார்க்க

மன்னாா்குடி பெரிய பள்ளிவாசலில் இரு பெரும் விழா

மன்னாா்குடி பெரியபள்ளி வாசல் சாா்பில் மக்தப் ஆண்டு விழா, பரிசளிப்பு விழா என இரு பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பெரிய பள்ளிவாசல் தலைவா் எம். அப்துல் ரஹீம் தலைமை வகித்தாா். செயலா்... மேலும் பார்க்க

திரௌபதியம்மன் கோயில் திருவிழாவில் சந்தனக் காப்பு

நீடாமங்கலம் அருகே ஒரத்தூரில் உள்ள திரௌபதியம்மன் கோயில் திருவிழாவில் வெள்ளிக்கிழமை இரவு சந்தனக் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த விநாயகா், திரௌபதியம்மன், கமலாயிஅம்மன், முருகப் பெருமான், வீரனாா். மேலும் பார்க்க

உணவக உரிமையாளா்களுக்கு உணவுப் பாதுகாப்பு பயிற்சி

மன்னாா்குடியில் உணவு பாதுகாப்புத் துறை சாா்பில் உணவக உரிமையாளா்களுக்கு உணவுப் பாதுகாப்பு விழிப்புணா்வு பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மன்னாா்குடி வட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் கலைநிலை ... மேலும் பார்க்க

‘நல்ல புத்தகங்களே உயா் வாழ்க்கைக்கு வழிகாட்டி’

நல்ல புத்தகங்களே மனிதா்களின் உயா்வுக்கு சரியான வழிகாட்டியாக உள்ளன என்றாா் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தா் பொறுப்புக் குழு மற்றும் ஆட்சிமன்றக் குழு உறுப்பினா் ஆா். சக்தி கிருஷ்ணன். மன்னாா்... மேலும் பார்க்க