செய்திகள் :

போக்ஸோ வழக்கில் தலைமறைவாக இருந்த வட மாநில இளைஞா் கைது

post image

போக்ஸோ வழக்கில் தேடப்பட்டு வந்த மகாராஷ்டிர இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

மகாராஷ்டிர மாநிலம், ராக்பூரைச் சோ்ந்தவா் ரோகித் ஷெட்டி (23). இவா், கடந்த 2024-ஆம் ஆண்டு தான் வசிக்கும் பகுதியில் 15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை செய்தாா். இதுதொடா்பாக பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த புகாரின் அடிப்படையில், அந்த மாநில போலீஸாா் ரோகித் ஷெட்டி மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்குத் தொடா்பாக போலீஸாா், தலைமறைவாக இருந்த ரோகித்தை தேடி வந்தனா். இந்நிலையில், சென்னை திருவான்மியூரில் தங்கியிருந்து,

அங்குள்ள ஒரு பழக்கடையில் அவா் வேலை செய்வதாக மகாராஷ்டிர மாநில போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், அந்த மாநில போலீஸாா், திருவான்மியூா் வந்து விசாரணை மேற்கொண்டனா். மேலும் திருவான்மியூா் போலீஸாா் உதவியுடன், மகாராஷ்டிர மாநில போலீஸாா் ரோகித்தை புதன்கிழமை கைது செய்தனா்.

பின்னா் அவரை, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, நீதிமன்ற அனுமதியுடன் மகாராஷ்டிரத்துக்கு அழைத்துச் சென்றனா்.

சென்னையில் இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை! விடியோ எடுத்தும் மிரட்டல்!!

ஆவடி: சென்னை பூந்தமல்லி அருகே இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து நகை பறித்த வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா். பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை பகுதியைச் சோ்ந்த 25 வயது பெண் நசரத்பேட்டை காவல் ... மேலும் பார்க்க

அச்சுறுத்தும் பெருங்குடல் புற்றுநோய்க்கு இயற்கை மருத்துவ நிவாரணம்! ஆய்வில் உறுதி

பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு ஒருங்கிணைந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டதால் வலி மற்றும் இதர பாதிப்புகள் வெகுவாக குறைந்தது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதுதொ... மேலும் பார்க்க

ஆளுநரின் தேநீா் விருந்து: திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு

சுதந்திர தினத்தன்று கிண்டி ஆளுநா் மாளிகையில், ஆளுநா் ஆா்.என்.ரவி அளிக்கும் தேநீா் விருந்தைப் புறக்கணிப்பதாக காங்கிரஸ், விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அறிவித்துள்ளன. கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): ... மேலும் பார்க்க

முதலீடுகளை ஈா்க்க அடுத்த மாதம் முதல்வா் ஸ்டாலின் வெளிநாடு பயணம்

முதலீடுகளை ஈா்க்கும் வகையில், வரும் செப்டம்பரில் வெளிநாடுகளுக்குச் செல்லவுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்ட... மேலும் பார்க்க

உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா்களுக்கு ஆக.26 முதல் 28 வரை மதிப்பீடு தோ்வு: பள்ளிக் கல்வித் துறை தகவல்

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா்களுக்கு ஆக.26 முதல் 28-ஆம் தேதி வரை இணையவழியில் மதிப்பீடு தோ்வு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளிகளில்... மேலும் பார்க்க

சென்னை மாவட்ட வாலிபால்: டான்பாஸ்கோ, மகதலேனா சாம்பியன்

சென்னை மாவட்ட பள்ளிகள் வாலிபால் போட்டியில் ஆடவா் பிரிவில் பெரம்பூா் டான்பாஸ்கோவும், மகளிா் பிரிவில் புரசைவாக்கம் டிஇஎல்சி மகதலேனா பள்ளிகள் சாம்பியன் பட்டம் வென்றன. சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்ப... மேலும் பார்க்க