டாஸ்மாக் முறைகேடு வழக்கு: ஆவணங்களை இன்று தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு
போலி கடவுச்சீட்டில் இலங்கைக்கு சென்றுவந்த தாய் - மகள் சென்னையில் கைது
போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட கடவுச்சீட்டை பயன்படுத்தி சென்னை - இலங்கை - சென்னைக்கு விமானத்தில் சென்று வந்த தாய்-மகள் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
இலங்கை தலைநகா் கொழும்புவிலிருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் தனியாா் விமானம் திங்கள்கிழமை இரவு சென்னை சா்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளின் கடவுச்சீட்டு மற்றும் ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் கணினி மூலம் சோதனையிட்டனா்.
அப்போது, இலங்கைக்கு சுற்றுலா பயணிகளாகச் சென்றுவிட்டு திரும்பிய அரும்பாக்கத்தைச் சோ்ந்த 48 வயது பெண், 21 வயது இளம்பெண் ஆகியோரின் கடவுச்சீட்டுகளில் குடியுரிமை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்படவே, அவா்களிடம் தீவிர விசாரணை நடத்தினா்.
அதில், அவா்கள் இலங்கையைச் சோ்ந்த தாய்-மகள் எனத் தெரியவந்தது. இவா்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து சென்னையில் குடியேறியதும், பின்னா் இவா்கள் போலி ஆவணங்கள் மூலம் இந்திய கடவுச்சீட்டுகளை வாங்கி, அதைப் பயன்படுத்தி தற்போது இலங்கை சென்று வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவா்கள் இருவரையும் மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸாரிடம் சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் ஒப்படைத்தனா். போலீஸாா் அவா்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.