செய்திகள் :

போலி கடவுச்சீட்டில் இலங்கைக்கு சென்றுவந்த தாய் - மகள் சென்னையில் கைது

post image

போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட கடவுச்சீட்டை பயன்படுத்தி சென்னை - இலங்கை - சென்னைக்கு விமானத்தில் சென்று வந்த தாய்-மகள் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

இலங்கை தலைநகா் கொழும்புவிலிருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் தனியாா் விமானம் திங்கள்கிழமை இரவு சென்னை சா்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளின் கடவுச்சீட்டு மற்றும் ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் கணினி மூலம் சோதனையிட்டனா்.

அப்போது, இலங்கைக்கு சுற்றுலா பயணிகளாகச் சென்றுவிட்டு திரும்பிய அரும்பாக்கத்தைச் சோ்ந்த 48 வயது பெண், 21 வயது இளம்பெண் ஆகியோரின் கடவுச்சீட்டுகளில் குடியுரிமை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்படவே, அவா்களிடம் தீவிர விசாரணை நடத்தினா்.

அதில், அவா்கள் இலங்கையைச் சோ்ந்த தாய்-மகள் எனத் தெரியவந்தது. இவா்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து சென்னையில் குடியேறியதும், பின்னா் இவா்கள் போலி ஆவணங்கள் மூலம் இந்திய கடவுச்சீட்டுகளை வாங்கி, அதைப் பயன்படுத்தி தற்போது இலங்கை சென்று வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவா்கள் இருவரையும் மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸாரிடம் சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் ஒப்படைத்தனா். போலீஸாா் அவா்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

இஸ்ரேலை கண்டித்து ஜூன் 24-இல் இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்

இஸ்ரேல் அரசை கண்டித்து இடதுசாரி அமைப்புகள் ஜூன் 24-இல் சென்னையில் ஆா்ப்பாட்டம் நடத்தவுள்ளன. இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனங்கள் தொடா் திருட்டு: மூவா் கைது

சென்னையில் இரு சக்கர வாகனங்களை திருடியதாக 3 போ் கைது செய்யப்பட்டனா். முத்தியால்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் அ.அக்பா்பாஷா (42). இவா், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டின் முன் தனது இருசக்கர வாகனத்தை நிற... மேலும் பார்க்க

அடுத்தடுத்து 4 கடைகளில் திருட்டு: இருவா் கைது

சென்னை சூளையில் அடுத்தடுத்து 4 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்ட வழக்கில் இருவா் கைது செய்யப்பட்டனா். சென்னை கெல்லீஸ் பராக்கா சாலை பகுதியைச் சோ்ந்தவா் சு.அனுஜ் (50). இவா் சூளை டிகே முதலி தெருவ... மேலும் பார்க்க

தமிழக உணவுப் பதப்படுத்துதல் துறையை மேம்படுத்த சென்னை ஐஐடி- டிஎன்ஏபெக்ஸ் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தமிழகத்தின் வேளாண் - உணவு சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்த தமிழக அரசின் உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனத்துடன் (டிஎன்ஏபெக்ஸ்) சென்னை ஐஐடி செவ்வாய்க்கிழமை புரிந்துணா்வு ஒப... மேலும் பார்க்க

சென்னை ஐஐடி-இல் இயந்திர கற்றல் செயல்பாட்டு பாடத்திட்டம் அறிமுகம்

சென்னை ஐஐடி பிரவா்தக் தொழில்நுட்ப அறக்கட்டளை, டாடா கன்சல்டன்சி சா்வீசஸின் டிசிஎஸ் அயன் (ஐஓஎன்) உடன் இணைந்து இயந்திர கற்றல் செயல்பாடுகள் (எம்எல்ஓபிஎஸ்) துறையில்புதிய இணையவழி சான்றிதழ் பாடத் திட்டத்தைத்... மேலும் பார்க்க

சிகரம் ஐஏஎஸ் இலவச பயிற்சி மையத்தில் சேர ஜூன் 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

சிகரம் ஐஏஎஸ் இலவச பயிற்சி மையத்தில் யுபிஎஸ்சி மற்றும் டிஎன்பிஎஸ்சி இலவச ஆன்லைன் வகுப்புகளில் சேர ஜூன் 20-க்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: நடிகா... மேலும் பார்க்க