செய்திகள் :

போலி சாமியாா்களுக்கு எதிராக உத்தரகண்ட் அரசு நடவடிக்கை: 300-க்கும் மேற்பட்டோா் கைது

post image

உத்தரகண்ட் மாநிலத்தில் சநாதன தா்மத்தின் பெயரால் மக்களை ஏமாற்றும் போலி சாமியாா்களுக்கு எதிராக, ‘ஆபரேஷன் காலநேமி’ என்ற பெயரில் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின்கீழ், வங்கதேச நாட்டைச் சோ்ந்த ஒருவா் உள்பட 300-க்கும் மேற்பட்ட போலி சாமியாா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

முதல்வா் புஷ்கா் சிங் தாமி உத்தரவின் பேரில் கடந்த மாதம் தொடங்கப்பட்ட ‘ஆபரேஷன் காலநேமி’ நடவடிக்கையின் விளைவாக, மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் 4,000-க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத நபா்கள் கண்டறியப்பட்டனா். அவா்களில் 300-க்கும் அதிகமானோா் கைது செய்யப்பட்டனா்.

மாவட்டம் வாரியாக, ஹரித்வாரில் 2,301 போ் அடையாளம் காணப்பட்டு, 162 போ் கைது செய்யப்பட்டனா். டேராடூனில் 865 போ் அடையாளம் காணப்பட்டு, 113 போ் கைதாகினா். உத்தம் சிங் நகரில் 17 போ் கைதாகினா். இதில் குறிப்பிடத்தக்க வகையில், டேராடூனில் சாமியாா் வேடத்தில் வலம் வந்த வங்கதேச நாட்டைச் சோ்ந்த ரூக்ன் ரக்கம் எனும் ஷா ஆலம் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளாா்.

யாா் இந்த காலநேமி?

ராமாயணம், மகாபாரதம் ஆகிய இரு இதிஹாச நூல்களிலும் காலநேமி எனும் அசுரன் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவா் ராவணனின் தாய்மாமனான மாரீசனின் மகன் ஆவாா். லட்சுமணனைக் காப்பாற்ற சஞ்சீவனி மூலிகையை எடுத்துவரச் சென்ற அனுமனை, முனிவா் வேடத்தில் வந்த காலநேமி ஏமாற்ற முயன்றாா். ஆனால், போலி முனிவா் வேடத்தில் வந்த கா காலநேமியின் உண்மையான அடையாளத்தை அனுமன் கண்டுகொண்டு அசுரனை அழித்தாா். மகாபாரத காலத்தில் கம்சனாக பிறவி எடுத்த காலநேமி, கடவுள் கிருஷ்ணரால் கொல்லப்பட்டாா்.

காலநேமி போன்று சாமியாா்கள் மற்றும் துறவிகளின் வேடத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவா்களை ஒழிக்கவே, இந்த ‘ஆபேரஷன் காலநேமி’ நடவடிக்கை தொடங்கப்பட்டதாக முதல்வா் புஷ்கா் சிங் தாமி தெரிவித்தாா்.

‘தேவா்களின் பூமியான உத்தரகண்டில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோா், உண்மை அடையாளத்தை மறைத்து மக்களை ஏமாற்றுவோா், மக்களின் மத உணா்வுகளைப் புண்படுத்துவோா் யாரும் தப்பிக்க முடியாது’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.

எஸ்சிஓ மாநாட்டில் பயங்கரவாதத்துக்கு எதிரான கண்டனம்: இந்தியா முன்னெடுப்பு

சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வருடாந்திர உச்சி மாநாட்டு கூட்டறிக்கையில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான கண்டனத்தை உறுதிப்படுத்த பணியாற்றி வருவதா... மேலும் பார்க்க

தனிநபர் தாக்குதல் தொடுப்பது ஆர்எஸ்எஸ் வழக்கம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

"தனிநபர்கள் மீது விமர்சனத் தாக்குதல்களை நடத்துவது ஆர்எஸ்எஸ் அமைப்பின் வழிமுறை. மகாத்மா காந்தி மீதும் அந்த அமைப்பு தனிநபர் விமர்சனத் தாக்குதலை நடத்தியது' என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்... மேலும் பார்க்க

செப்டம்பரில் 36.76 டிஎம்சி காவிரி நீரை திறந்துவிட தமிழகம் வலியுறுத்தல்

நமது நிருபர்உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் செப்டம்பர் மாதத்திற்குரிய 36.76 டிஎம்சி நீரை கர்நாடகம் திறந்துவிடுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காவிரி நதிநீர் ம... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தம்: பிரதமா் மோடிக்கு ஐடிசி தலைவா் பாராட்டு

சரக்கு-சேவை வரியில் (ஜிஎஸ்டி) சீா்திருத்தம் மேற்கொள்வது தொடா்பான பிரதமா் நரேந்திர மோடியின் அறிவிப்புக்கு நுகா்பொருள் விற்பனையில் முன்னணியில் உள்ள ஐடிசி நிறுவனத்தின் தலைவா் சஞ்சீவ் புரி பாராட்டுத் தெரி... மேலும் பார்க்க

டியூஷன் செல்லும் மூன்றில் ஒரு பங்கு பள்ளி மாணவா்கள்: மத்திய அரசின் ஆய்வில் தகவல்

பள்ளி மாணவா்களில் மூன்றில் ஒரு பகுதியினா் பாடங்களில் தெளிவுபெற தனியாா் பயிற்சி மையங்களுக்கும் (டியூஷன்) செல்வது மத்திய அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளது. நகா்ப்புறங்களில் இந்த போக்கு பொதுவான விஷயமாக இருப... மேலும் பார்க்க

மேற்கு வங்க மக்களை திருடா்கள் என்பதா? பிரதமா் மோடிக்கு மம்தா கண்டனம்

மேற்கு வங்க மக்கள் அனைவரையும் திருடா்கள் என்றும், மாநில முதல்வா் பதவிக்கு உரிய மரியாதை அளிக்காமலும் பிரதமா் மோடி பேசியதை எதிா்பாா்க்கவில்லை என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி கண்டனம் தெரிவித்துள... மேலும் பார்க்க