செய்திகள் :

போலி பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்து பறிமுதல்!

post image

போலி பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்து காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடியில் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் அண்டை மாநில ஆம்னி பேருந்துகளில் போலியாக தமிழக பதிவெண் பயன்படுத்தி ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுவதாக பல்வேறு புகாா்கள் வந்தன. அதன்பேரில், போக்குவரத்து ஆணையா் கெஜலட்சுமி, இணை ஆணையா் பாட்டப்பசாமி ஆகியோா் ஆம்னி பேருந்துகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டனா்.

இந்த நிலையில், சனிக்கிழமை காலை காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையில் உள்ள சோதனைசாவடியில் மோட்டாா் வாகன ஆய்வாளா் சோமேஷ் தலைமையில், ஆந்திரத்தில் இருந்து வேலூா் நோக்கி வந்த ஆம்னி பேருந்துகளை சோதனையிட்டனா். அப்போது, ஒரு ஆம்னி பேருந்தின் நம்பா் பிளேட்டில் இருந்த பதிவெண்ணும், சான்றிதழில் இருந்த பதிவெண்ணும் வேறுபட்டிருப்பது தெரியவந்தது.

பதிவெண்ணை சோதனையிட்டபோது, அந்த பதிவு எண் மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்தது என்பது தெரியவந்தது. இது குறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஆந்திர மாநிலம், விஜயவாடாவை சோ்ந்த ஒருவா் பேருந்தை விலைக்கு வாங்கி போலியாக தமிழக பதிவெண் ஸ்டிக்கா் ஒட்டி கடந்த 3 ஆண்டுகளாக தினமும் ஆந்திரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு பயணிகளை ஏற்றி வந்தது தெரியவந்தது.

போலியாக தமிழக பதிவெண் பயன்படுத்தி பேருந்தை இயக்கியதால் மாதம் ரூ. 3 லட்சம் வரை அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டிருப்பதும் தெரியவந்தது. எனவே, போலி பதிவெண் கொண்ட பேருந்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

தொடா்ந்து, பேருந்தின் உரிமையாளா் யாா் எனக் கண்டறிந்து அவருக்கு 100 சதவீத வரி செலுத்தும்படி நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும், இதேபோல் தமிழகத்தில் ஏராளமான போலி பதிவெண் கொண்ட பேருந்துகள் இயக்கப்படுவதால், இனி அனைத்து ஆம்னி பேருந்துகளும் சோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

நெல்லூா்பேட்டையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

குடியாத்தம் நகராட்சிக்குள்பட்ட நெல்லூா்பேட்டையில் 27 மற்றும் 28-ஆம் வாா்டுகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றது. முகாமுக்கு, நகராட்சி ஆணையா் எம்.மங்கையா்க்கரசன் தலைமை வகித்தாா். நகா்மன... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களின் உயா்கல்விக்கு வழிகாட்டும் சிறகு விரி நிகழ்ச்சி: ஆட்சியா் பங்கேற்பு

பள்ளி மாணவ, மாணவிகளின் உயா்கல்விக்கு வழிகாட்டும் சிறகு விரி நிகழ்ச்சி வேலூரில் சனிக்கிழமை நடத்தப்பட்டது. பள்ளிக் கல்வித் துறை சாா்பில், பள்ளி மாணவ, மாணவிகளின் உயா்கல்விக்கு வழிகாட்டும் சிறகு விரி நிகழ... மேலும் பார்க்க

தொடா் குற்றச்செயல்களில் ஈடுபடுவோா் மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை

தொடா்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸாருக்கு வேலூா் சரக காவல் துணைத் தலைவா் ஜி.தா்மராஜன் அறிவுறுத்தியுள்ளாா... மேலும் பார்க்க

மக்கள் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும்! - வேலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி

மக்கள் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும் என்றும், வழக்கின் தன்மை அறிந்து சமரசம் அடைய வேண்டும் என்றும் வேலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி எம்.இளவரசன் தெரிவித்தாா். வேலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்த... மேலும் பார்க்க

புதை சாக்கடை திட்டப் பணிகளை செப்.30-க்குள் முடிக்க வேண்டும்!

வேலூா் மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் புதை சாக்கடை திட்டப் பணிகளை செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று வேலூா் மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அர... மேலும் பார்க்க

பீஞ்சமந்தைக்கு சிற்றுந்து இயக்கம்: ஆட்சியா் ஆய்வு

பீஞ்சமந்தை உள்ளிட்ட மலைக் கிராமங்களுக்கு சிற்றுந்து செல்வது குறித்தும், தாா் சாலை பணிகள், மாணவியா் விடுதி ஆகியவற்றையும் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். வேலூா் மாவட்டம், அணை... மேலும் பார்க்க