செய்திகள் :

போலி விண்வெளி வீரரின் காதலில் விழுந்த மூதாட்டி! ரூ. 6 லட்சத்தை இழந்தார்!

post image

ஜப்பானைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி, விண்வெளி வீரர் எனக் கூறியவரிடம் ரூ. 6 லட்சம் பணத்தை இழந்தார்.

ஹொக்கைடோ மாகாணத்தைச் சேர்ந்த 80 வயது பெண்ணுடன் மர்ம நபர் ஒருவர் கடந்த ஜூலை மாதம் சமூக ஊடகம் மூலம் தொடர்புகொண்டு நட்பாகியுள்ளார்.

தொடர்ந்து, அந்த பெண்ணுடன் பேசிவந்த நபர், தான் ஒரு விண்வெளி வீரர் என்று கூறி காதல் வலையில் சிக்கவைத்துள்ளார்.

பின்னர், தான் தாக்குதலுக்கு உள்ளாகி விண்வெளியில் விண்கலத்துக்குள் சிக்கிக் கொண்டதாகவும், ஆக்ஸிஜன் வாங்குவதற்கு உடனடியாகப் பணம் தேவை என்றும் அந்த பெண்ணிடம் கேட்டுள்ளார்.

மர்ம நபரின் கதையை நம்பிய பெண், தான் சேர்த்து வைத்திருந்த 10 லட்சம் யென் (இந்திய மதிப்பின்படி ரூ. 5.95 லட்சம்) பணத்தை அவர் கூறிய கணக்குக்கு அனுப்பியுள்ளார்.

அதன்பிறகு, மர்ம நபர் அந்த பெண்ணைத் தொடர்புகொள்ளாத நிலையில், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தவர், குடும்பத்தினரிடம் நடந்ததைக் கூறியுள்ளார்.

உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு மர்ம நபரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில்,

”தனிமையில் இருக்கும் வயதான பெண்கள் அல்லது ஆண்களைக் குறிவைத்து அவர்களை காதல் வலையில் சிக்க வைக்கும் கும்பல், சில நாள்களில் அவர்களிடம் இருந்து பணத்தை மோசடி செய்கின்றனர். இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டு மட்டும் வயதானவர்களைக் காதலிப்பது போல் நடித்து சுமார் 1,000 கோடி டாலர்கள் மோசடி செய்திருப்பதாக அமெரிக்க வர்த்தக ஆணையம் தெரிவித்துள்ளது.

An 80-year-old woman from Japan lost Rs. 6 lakh to a man who claimed to be an astronaut.

இதையும் படிக்க : ஜிஎஸ்டி: இறுதியில் ராகுலின் ஆலோசனையைப் பின்பற்றிய பாஜக அரசு! - காங்கிரஸ்

போப் பதினான்காம் லியோவுடன் இஸ்ரேல் அதிபர் சந்திப்பு!

இஸ்ரேல் அதிபர் ஐசாக் ஹெர்சோக், வாடிகன் நகரத்தில், போப் பதினான்காம் லியோவை நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். காஸா மீதான ஆக்கிரமிப்புகளை அதிகரிக்க, இஸ்ரேல் அரசு முடிவு செய்துள்ள நிலையில், பாலஸ்தீனர்கள் ... மேலும் பார்க்க

ஆப்கனில் மீண்டும் நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் வியாழக்கிழமை காலை நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கம் தலைநகர் காபூலுக்கு 108 கி.மீ. கிழக்கே இந்திய நேரப்படி, இன்று காலை 10.... மேலும் பார்க்க

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 60 பேர் பலி!

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 60 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நைஜீரியாவின் வட-மத்திய நைஜர் மாநிலத்தில் 100 பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்கு... மேலும் பார்க்க

பிரிட்டனில் காா்கள் மோதல்: 2 இந்திய மாணவா்கள் உயிரிழப்பு

பிரிட்டனின் தென்கிழக்கில் உள்ள எஸ்ஸெக்ஸ் பகுதியில் 2 காா்கள் மோதிக் கொண்ட விபத்தில் தெலங்கானாவைச் சோ்ந்த இரு மாணவா்கள் உயிரிழந்தனா். மேலும் 5 மாணவா்கள் படுகாயமடைந்தனா். பிரிட்டனில் பயிலும் தெலங்கானா... மேலும் பார்க்க

பெய்ஜிங்கில் புதின், கிம் ஜோங்-உன் பேச்சுவாா்த்தை

சீன தலைநகா் பெய்ஜிங்கில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதினும் வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன்னும் புதன்கிழமை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினா். இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: தற்கொலைத் தாக்குதலில் 14 போ் உயிரிழப்பு

பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த பலூசிஸ்தான் மாகாணத்தில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதலில் 14 போ் உயிரிழந்தனா். இது குறித்து அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்ததாவது: குவெட்டா நகரில் நடைபெற்ற ... மேலும் பார்க்க