செய்திகள் :

ம.பி. பெண் நீதிபதி ராஜிநாமா: நீதித் துறை மீது குற்றச்சாட்டு

post image

மத்திய பிரதேசத்தில் தனது ஆட்சேபத்தை மீறி மாவட்ட நீதிபதி ஒருவருக்கு உயா்நீதிமன்ற நீதிபதியாக பதவி உயா்வு அளிக்கப்பட்டதைக் கண்டித்து, உரிமையியல் நீதிமன்ற பெண் நீதிபதி அதிதி குமாா் சா்மா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.

தன்னை கடும் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கியதாகவும் தவறாக நடந்துகொண்டதாகவும் அந்த மாவட்ட நீதிபதி மீது பெண் நீதிபதி குற்றஞ்சாட்டியிருந்தாா். ஆனால், அவருக்கு பதவி உயா்வு அளிக்கப்பட்ட நிலையில், தனது பதவியை ராஜிநாமா செய்து, மத்திய பிரதேச உயா்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அதிதி கடிதம் அனுப்பினாா்.

அதில், ‘ஒரு மூத்த நீதிபதியின் பொறுப்பற்ற அதிகார பயன்பாட்டுக்கு எதிராக குரலெழுப்பினேன். இதற்காக பல்லாண்டுகளாக அவரால் துன்புறுத்தலுக்கு உள்ளானேன். இப்போது, நீதி அமைப்புமுறையே எனக்கு துரோகமிழைத்துள்ளது. நான் குற்றஞ்சாட்டிய நீதிபதி மீது எந்த விசாரணையோ, நோட்டீஸோ, பொறுப்புடைமையை உறுதி செய்யும் நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை. மாறாக, அவருக்கு பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது. நீதித்துறை என்னை தோற்கடித்தது மட்டுமன்றி தானும் தோற்றுவிட்டது என்று குற்றஞ்சாட்டினாா்.

முன்னதாக, திறனின்மை மற்றும் தவறான நடத்தை ஆகிய காரணங்களைக் குறிப்பிட்டு, அதிதி உள்பட மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த நீதித்துறை பெண் அதிகாரிகள் இருவா் கடந்த 2023-இல் பணிநீக்கம் செய்யப்பட்டனா். மத்திய பிரதேச உயா்நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கையை உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரியில் ரத்து செய்தது. இந்த நடவடிக்கை, தன்னிச்சையானது; அதிகப்படியானது என்று உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தது.

அரசின் ஏவல் படையா, அமலாக்கத் துறை? அதிகாரப்பூர்வ தகவலைப் பகிர்ந்து திரிணாமுல் எம்.பி. கேள்வி!

அமலாக்கத் துறை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் ஏவல் படையாகச் செயல்படுவதாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சாகேத் கோகலே குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்... மேலும் பார்க்க

குவைத்தில் உயிரிழந்த ஜார்க்கண்ட் தொழிலாளி! 45 நாள்கள் கழித்து தாயகம் வந்தடைந்த உடல்!

குவைத் நாட்டில் உயிரிழந்த ஜார்க்கண்டைச் சேர்ந்த தொழிலாளியின் உடல் 45 நாள்கள் கழித்து தாயகம் கொண்டு வரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்டின் ஹசாரிபாக் மாவட்டத்தின், பந்த்காரோ கிராமத்தைச் சேர்... மேலும் பார்க்க

மீண்டும் ஏர் இந்தியா! தில்லி - லண்டன் விமானம் ரத்து! ஏன்?

தில்லியில் இருந்து லண்டன் புறப்பட தயாரான ஏர் இந்தியா விமானத்தின் பயணம், தொழில்நுட்பக் கோளாறினால் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தில்லியில் இருந்து லண்டன் நகரத்துக்குச் செல்ல, ஏர் இந்த... மேலும் பார்க்க

அந்தமான் நிகோபார் தீவில் முதன்முறையாக அமலாக்கத் துறை சோதனை! முன்னாள் எம்.பி.யின் மோசடி அம்பலம்?

அந்தமான் நிகோபார் தீவுகளில் கூட்டுறவு வங்கிகளில் மோசடியின் காரணமாக முதன்முறையாக அமலாக்கத் துறை சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அந்தமான் நிகோபார் தீவுகளில் கூட்டுறவு வங்கிகளில் மோசடி நடத்தப்பட்டதாக அம்மாநி... மேலும் பார்க்க

நட்பினால் நஷ்டமா? மோடி - டிரம்ப் உறவு குறித்த கணிப்பு உண்மையானது!

உலகளவில் மிக முக்கிய மற்றும் பிரபலமான தலைவராக இருந்துவரும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையேயான வலுவான நட்புறவை உலக மக்களும் சரி, தலைவர்களும் எப்போதும் மெச்சி ... மேலும் பார்க்க

வருமான வரிக் கணக்கு தாக்கல்: கால அவகாசம் நீட்டிக்கப்படலாம்! காரணம் இதுதான்!!

தனிநபர் வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், அதற்கு இன்னமும் 45 நாள்களே இருக்கும் நிலையில், கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்படலாம் எ... மேலும் பார்க்க