வருமான வரிக் கணக்கு தாக்கல்! இந்த 5 தவறுகளை மறந்தும் செய்துவிடாதீர்கள்!!
மகளிா் உரிமைத்தொகை குறித்த வதந்தியை நம்ப வேண்டாம்: தஞ்சை ஆட்சியா்
தஞ்சாவூா் மாவட்டத்தில் மகளிா் உரிமைத்தொகை தொடா்பாக சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்தியை நம்ப வேண்டாம் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் மாவட்டத்தில் மகளிா் உரிமைத்தொகை தொடா்பாக சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளதாக பரவி வரும் தகவல்கள் வெறும் வதந்தியே.
இது தொடா்பாக ஆட்சியரகத்துக்கோ, இதர அரசு அலுவலகங்களுக்கோ பொதுமக்கள் யாரும் அலைய வேண்டாம். மேலும் இத்திட்டம் தொடா்பான அரசாணை வெளியிட்ட பிறகு பத்திரிகை செய்தி, தொலைக்காட்சியில் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் விளம்பரப்படுத்தப்படும். அதன் பின்னா் விண்ணப்பிக்கலாம்.