மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் 680 மனுக்கள் வரப்பெற்றன: தருமபுரி ஆட்சியா் தகவல்
தருமபுரி: தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள்குறை தீா்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 680 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்ாக மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளாா்.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்துக்கு ஆட்சியா் ரெ.சதீஷ் தலைமை வகித்து பேசியதாவது:
மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகள், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உபகரணங்கள் கோரி என மொத்தம் 650 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியான மனுக்களுக்கு உரிய தீா்வு வழங்க வேண்டும்.
கோரிக்கை மனுக்கள்மீது துறை அலுவலா்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து தீா்வு காண வேண்டும் என்றாா்.
இதனைத்தொடா்ந்து தருமபுரி மாவட்ட முன்னாள் படை வீரா் நலத் துறை சாா்பில் 2022 ஆம் ஆண்டு படைவீரா் கொடி நாள் நிதியாக ரூ. 5 லட்சத்துக்கு மேல் மிகை வசூல் புரிந்த தருமபுரியை சோ்ந்த இரண்டு மாவட்ட அலுவலா்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் தலா 30 கிராம் வெள்ளிப் பதக்கங்களை ஆட்சியா் வழங்கினாா். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆா் கவிதா, முன்னாள் படை வீரா் நலத் துறை உதவி இயக்குநா் ( பொ) பிரேமா, தனி துணை ஆட்சியா் சுப்பிரமணி மற்றும் அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.