செய்திகள் :

மங்கோலியாவில் தட்டம்மை பரவல்: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு!

post image

மங்கோலியா நாட்டில் தட்டம்மை பாதிப்பினால், பலியானோரது எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மங்கோலியாவில், கடந்த சில மாதங்களாக தட்டம்மை பரவல் வேகமெடுத்துள்ளது. இந்த நோயினால், குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தட்டம்மையால் பாதிக்கப்பட்ட, 2 பேர் நேற்று (ஜூலை 28) சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர். இதன்மூலம், மங்கோலியாவில் தட்டம்மையால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்துடன், தட்டம்மையால் பாதிக்கப்பட்டு 6 குழந்தைகள் உள்பட 109 பேர் மருத்துவமனைகளில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள், தட்டம்மை பாதிப்புகளை உடனடியாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தொற்றானது, இளம் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்பதால், பெற்றோர்கள் உடனே அவர்களது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக, 2023-ம் ஆண்டில் மட்டும் சுமார் 1,07,500 பேர் தட்டம்மையினால் பாதிக்கப்பட்டு பலியாகினர். இதில், பெரும்பாலானோர் 5 வயதுகுட்பட்ட குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: யேமனில் நிமிஷா பிரியா தூக்கு தண்டனை ரத்து? சகோத‌ர‌ர் மறுப்பு!

The death toll from a measles outbreak in Mongolia has risen to 10, according to authorities in the country.

ஆஸ்கர் வென்ற ஆவணப் படத்தில் பணியாற்றிய ஆர்வலர் சுட்டுக்கொலை!

மேற்கு கரைப் பகுதியில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளரால், பாலஸ்தீன ஆர்வலர் மற்றும் ஆசிரியரான ஒடேஹ் முஹம்மது ஹதாலின் சுட்டுக்கொல்லப்பட்டார். பாலஸ்தீன சமூகத்தின் மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் ராணு... மேலும் பார்க்க

இம்ரான் கானின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு!

பாகிஸ்தானில் மே 9ல் நடைபெற்ற வன்முறை வழக்குகள் தொடர்பாக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தாக்கல் செய்த ஜாமீன் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்கு ஒத்... மேலும் பார்க்க

கனடாவில் சிறிய விமானம் விபத்து: இந்திய இளைஞர் பலியானது உறுதி!

கனடா நாட்டில் சிறிய ரக விமான விபத்தில், இந்திய இளைஞர் ஒருவர் பலியானது உறுதியாகியுள்ளதாக, அந்நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது. நியூ ஃபவுண்ட் லேண்ட் மாகாணத்தின், டீர் லேக் பகுதியில் கடந்த ஜூல... மேலும் பார்க்க

நைஜீரியா: பணம் கொடுத்தும் 35 பிணைக் கைதிகள் கொலை! கடத்தல் கும்பல் வெறிச் செயல்!

நைஜீரியா நாட்டில், பணம் கொடுக்கப்பட்டபோதிலும், சுமார் 35 பிணைக் கைதிகளை கடத்தல்காரர்கள் சுட்டுக்கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு ஸம்ஃபரா மாநிலத்தின், பங்கா எனும் கிராமத்தில் இருந்து, கடந்த மார... மேலும் பார்க்க

சொந்தமாக பணமோ விமான நிலையமோ இல்லை..ஆனால் கோடீஸ்வர நாடு! எது தெரியுமா?

சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்ட்ரியா நாடுகளை தனது அரணாகக் கொண்டிருக்கும் நாடு லிச்டென்ஸ்டெய்ன். ஐரோப்பியாவின் மிகப் பணக்கார நாடாக மின்னிக் கொண்டிருக்கிறது இது.இதன் மிகச் சிறிய அளவு மட்டுமல்ல, இது பல்வேறு... மேலும் பார்க்க

மெஸ்ஸி.. மெஸ்ஸி..! இந்த முறை கோல்டு பிளே ‘கிஸ் கேம்’மில்..!

அமெரிக்காவில் நடைபெற்ற கோல்டு பிளே இசை நிகழ்ச்சியில் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, தனது மனைவி அன்டோனெலா மற்றும் குழந்தைகளுடன் கலந்துகொண்டார்.உலகில் பல்வேறு நாடுகளில் நடக்கும் இசை நிகழ்ச்சிகள், வ... மேலும் பார்க்க